ஆனந்த நாட்டியம்
***கால சக்கரத்தில் சில மணித்துளிகள்***
பௌர்ணமி நேரம்,,
அழகிய நிலவு ஒளியில்,,
சலசலத்து மினுமினு வென்று,,
ஓடும் நதியோரம்,
அழகிய கோவில் மண்டபம்..
**
பௌர்ணமி நேர முன்னிரவில்,,
எல்லாம் சேர்ந்து,,
அழகிய ரம்மியமாக காட்சி தந்தது..
அழகிய சிற்ப வேலைபாடுகள் நிறைந்த,,
அந்த மண்டபம் நடுவே,,
அழகிய விரிப்பில்,
மனிதர்கள் சிலர் இருக்க,,
பேரழகு கொண்ட பெண்ணொருத்தி,,
அழகிய ஆடை ஆபரணங்கள் அணிந்து,,
வெகு அழகாக அபிநயம்,,
செய்தபடி,,
அற்புத இசைக்கு,,
ஆனந்த நாட்டியம் ஆடி கொண்டிருந்தாள்..
**
தமிழ் மின்னியது அங்கே,,
இசை வடிவில்,,
நாட்டிய வடிவில்..
**
சிலிர்த்து போய்,,,
மெய் மறந்து ரசித்து கொண்டு இருந்தேன்,,
அந்த அழகிய சோழர் காலத்தில் ,,
காவிரி கரை ஓரம் ,,
ஓர் நாள்,,
மிக சரியாக,,
ஆயிரம் வருடங்களுக்கு முன்...
No comments:
Post a Comment