திருப்தியான மனநிலை
சலனமற்று,,
நினைவுகள் அற்று,,
மரணம் கொண்ட நிலையில்,,
ஒரு ஆழ்ந்த உறக்கம்,,
நீண்ட இடைவெளிக்கு பின்..
**
சிறு புற அதிர்வில்,,
சட்டென்று விழித்தேன்..
விடியல் தொடரும் வேளை,,
மிச்சம் இருந்த இருள்,,
தன் கடைசி நேர ,,
பரபரப்பில் இருந்து,,
விலக தயாராக,,
சூரிய கதிர்களை எதிர் நோக்கி இருந்தது,,
**
உறக்கம் கலைந்த வினாடியே,,
போர்வையை உதறி எழுந்தேன்,,
அழகிய ,,
ஆழமான அமைதியான,
உறக்கம் தந்த இறைவனுக்கு ,,
நன்றி சொல்லி,,
அந்த அழகிய பள்ளத்தாக்கை நோக்கி,
இந்த நாளின் என் நடை பயணத்தை,,
துவக்கினேன்,,
**
அழகிய உறக்கம்,
எனை ஆட்கொண்டதால்,,
திருப்தியான மனநிலையில்,
நான்..
**
மகிழ்வான நடையில்,,
மெல்ல சூரிய கதிரும்,,
என்னோடு மகிழ்வில் கலந்து கொள்ள,,
மரக்கிளைகள் வழியே,,
என்னுடன் தொடர்பு கொள்ள,,
வந்து கொண்டிருந்தது...
No comments:
Post a Comment