என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 5 June 2012

திருப்தியான மனநிலை

சலனமற்று,,

நினைவுகள் அற்று,,

மரணம் கொண்ட நிலையில்,,

ஒரு ஆழ்ந்த உறக்கம்,,

நீண்ட இடைவெளிக்கு பின்..

**
சிறு புற அதிர்வில்,,

சட்டென்று விழித்தேன்..

விடியல் தொடரும் வேளை,,

மிச்சம் இருந்த இருள்,,

தன் கடைசி நேர ,,

பரபரப்பில் இருந்து,,

விலக தயாராக,,

சூரிய கதிர்களை எதிர் நோக்கி இருந்தது,,

**
உறக்கம் கலைந்த வினாடியே,,

போர்வையை உதறி எழுந்தேன்,,

அழகிய ,,

ஆழமான அமைதியான,

உறக்கம் தந்த இறைவனுக்கு ,,

நன்றி சொல்லி,,

அந்த அழகிய பள்ளத்தாக்கை நோக்கி,

இந்த நாளின் என் நடை பயணத்தை,,

துவக்கினேன்,,

**
அழகிய உறக்கம்,

எனை ஆட்கொண்டதால்,,

திருப்தியான மனநிலையில்,

நான்..

**
மகிழ்வான நடையில்,,

மெல்ல சூரிய கதிரும்,,

என்னோடு மகிழ்வில் கலந்து கொள்ள,,

மரக்கிளைகள் வழியே,,

என்னுடன் தொடர்பு கொள்ள,,

வந்து கொண்டிருந்தது...

No comments: