அன்றொரு நாளில்,,
நான் பள்ளி சிறுவன்..
இன்றைய சிறார் போல அல்ல,
அன்று,,
என் போன்றவர்கள் எல்லாம்,,
பள்ளி இறுதி வரையில்,,
குழந்தைகளாகவே இருந்த ஒரு காலம் அது..
**
அன்றெல்லாம்,,
என் அறையில்,, இரவு உறக்கத்தில்,
கண்ட கனவுகள்,
ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம்..
**
கனவுகள் வராத,,
நினைவு இரவுகளில்,,
என் உடல் மட்டும்,,
படுக்கையில் இருக்க,,
நான் மெல்ல பறந்து,,
ஜன்னலின் வழியே,,
வெளியேற முற்பட்டதுண்டு..
**
அவ்வப்போது,,
சிறுவனாகிய என்னை,,
இறைவன் அழைப்பார் போலும்..
இன்றும் நினைவிருக்கிறது,,
உடல் இருக்க,,
நான் மட்டும் அந்தரத்தில் உலவியது..
**
நான் மனதார நேசித்த,
என் நண்பனின் தந்தை,,
இறந்தபோது கூட,,
அதே வினாடிகளில்,,
அவர் என் கனவினில் வந்து சொல்லி,,
சென்றதும் நினைவிருக்கிறது..
அன்று குழந்தை உள்ளத்தோடு இருந்தேன்.
அதனால்தானோ அந்த சம்பவங்கள்.?
**
இன்று,, ?!!
கனவுகள் வருகின்றன,
வெறும் பயங்கர கனவுகள்.,,
சர்ப்பம் எனை தீண்ட,,
பிறிதொரு கனவில்,,
நடுநிசி பேய்கள் எனை துரத்த,
நான் எங்கோ தடம் மாறி விட்டேன் ,,
என்று புரிகிறது,, இப்பொழுது..
**
ஆம்,,
அறநெறி வாழ்விலிருந்து,,
சற்றே எங்கோ சறுக்கி இருக்கிறேன்..
அதன் விளைவுதான்,
இன்றைய துயரங்களும்,,
பயங்கர கனவுகளும்.
அன்று,,
என் போன்றவர்கள் எல்லாம்,,
பள்ளி இறுதி வரையில்,,
குழந்தைகளாகவே இருந்த ஒரு காலம் அது..
**
அன்றெல்லாம்,,
என் அறையில்,, இரவு உறக்கத்தில்,
கண்ட கனவுகள்,
ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம்..
**
கனவுகள் வராத,,
நினைவு இரவுகளில்,,
என் உடல் மட்டும்,,
படுக்கையில் இருக்க,,
நான் மெல்ல பறந்து,,
ஜன்னலின் வழியே,,
வெளியேற முற்பட்டதுண்டு..
**
அவ்வப்போது,,
சிறுவனாகிய என்னை,,
இறைவன் அழைப்பார் போலும்..
இன்றும் நினைவிருக்கிறது,,
உடல் இருக்க,,
நான் மட்டும் அந்தரத்தில் உலவியது..
**
நான் மனதார நேசித்த,
என் நண்பனின் தந்தை,,
இறந்தபோது கூட,,
அதே வினாடிகளில்,,
அவர் என் கனவினில் வந்து சொல்லி,,
சென்றதும் நினைவிருக்கிறது..
அன்று குழந்தை உள்ளத்தோடு இருந்தேன்.
அதனால்தானோ அந்த சம்பவங்கள்.?
**
இன்று,, ?!!
கனவுகள் வருகின்றன,
வெறும் பயங்கர கனவுகள்.,,
சர்ப்பம் எனை தீண்ட,,
பிறிதொரு கனவில்,,
நடுநிசி பேய்கள் எனை துரத்த,
நான் எங்கோ தடம் மாறி விட்டேன் ,,
என்று புரிகிறது,, இப்பொழுது..
**
ஆம்,,
அறநெறி வாழ்விலிருந்து,,
சற்றே எங்கோ சறுக்கி இருக்கிறேன்..
அதன் விளைவுதான்,
இன்றைய துயரங்களும்,,
பயங்கர கனவுகளும்.