என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 29 August 2012

நான்...

நான்...

சுயநலம் அற்று,,

கள்ளம் அற்று,


கபடு அற்று,,

சிரித்த முகம் கொண்டு,,

உலவியதால்,,

கள்ளம் கொண்ட,,

வஞ்சம் கொண்ட,,

மனிதர் சிலரால்,,

ஏமாற்றப்பட்டவன்.
 
****
 
நான்,,

ஒரு பிம்பம் ,,


அல்லது,,


வேறு எங்கோ,,

எதுவோ,,


இயக்க ,,


இங்கே இயங்கும் ,,


அற்ப இயந்திரம் போல,,


நான்...


அவ்வளவே நான்..
 
***
நான்..

அன்றொரு நாளில் ஏதுமற்றவன்,,


ஏதும் அற்று இன்றும்,


பிறிதொரு நாளில்,,

ஏதுமற்றவனாகவே, எங்கோ செல்வேன்..


அவ்வளவே நான்..
 
**
 

 

No comments: