தென்றலை வழிமறித்து,
மெல்லிய குளிரை,
அழகிய நறுமணத்தை,
அதனிடம் கொடுத்து,
விழி மூடி,
தேவதை போல உறங்கும்,
உன்னிடம் அனுப்புகிறேன்..
என் தென்றல்,
அங்கு வந்து சேர்ந்திருக்கும்,
இந்நேரம்..
அழகான உணர்வுகளில்,
இன்றைய நம்,
காதல் பொழுதுகளை,
எண்ணி,
சிலிர்த்தபடி கிடக்கிறேன்,
என் அறையில்..
இந்த இரவின்,
நிசப்தத்தில்,
நான் மட்டும்,
மிக மகிழ்வாக,
உன்னோடு உரையாடி,
கொண்டிருக்கிறேன்,
கற்பனையில்..
உனக்கும்,
எனக்குமான வாழ்வியல்,
வெகு அழகாக,
துவங்கி விட்டது,
என் கனவுகளில்..
நாளை நிஜம் பெரும்,
இந்த கனவுகளில்,
பேரழகை இடைவிடாது,
சேர்த்து கொண்டிருக்கிறேன்,
உனக்காக..
நீ ,
இந்நேரம் உறங்கி இருப்பாய்,
என் மீது கொண்ட,
நம்பிக்கையில்..
நான் இங்கே,
உனக்காக,
நம் வாழ்வியலை,
வடிவமைத்து கொண்டிருக்கிறேன்,
உறங்காமல்..
என் தேவதை பெண்ணே,
நீ உறங்கு,
நானிருக்கிறேன்...
என் ஆயுள் தீர்ந்த பின்னும்,
உனக்கான என் பாதுகாப்பு,
தொடரும்..
நீ உறங்கு..
மெல்லிய குளிரை,
அழகிய நறுமணத்தை,
அதனிடம் கொடுத்து,
விழி மூடி,
தேவதை போல உறங்கும்,
உன்னிடம் அனுப்புகிறேன்..
என் தென்றல்,
அங்கு வந்து சேர்ந்திருக்கும்,
இந்நேரம்..
அழகான உணர்வுகளில்,
இன்றைய நம்,
காதல் பொழுதுகளை,
எண்ணி,
சிலிர்த்தபடி கிடக்கிறேன்,
என் அறையில்..
இந்த இரவின்,
நிசப்தத்தில்,
நான் மட்டும்,
மிக மகிழ்வாக,
உன்னோடு உரையாடி,
கொண்டிருக்கிறேன்,
கற்பனையில்..
உனக்கும்,
எனக்குமான வாழ்வியல்,
வெகு அழகாக,
துவங்கி விட்டது,
என் கனவுகளில்..
நாளை நிஜம் பெரும்,
இந்த கனவுகளில்,
பேரழகை இடைவிடாது,
சேர்த்து கொண்டிருக்கிறேன்,
உனக்காக..
நீ ,
இந்நேரம் உறங்கி இருப்பாய்,
என் மீது கொண்ட,
நம்பிக்கையில்..
நான் இங்கே,
உனக்காக,
நம் வாழ்வியலை,
வடிவமைத்து கொண்டிருக்கிறேன்,
உறங்காமல்..
என் தேவதை பெண்ணே,
நீ உறங்கு,
நானிருக்கிறேன்...
என் ஆயுள் தீர்ந்த பின்னும்,
உனக்கான என் பாதுகாப்பு,
தொடரும்..
நீ உறங்கு..