என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday 2 June 2013

துளிகள் ( சற்று காதல் சேர்த்து )

துளிகள் ( சற்று காதல் சேர்த்து ) 

இன்னும், 
இன்னும், 
என்னை ஈர்த்துக்கொண்டுதான் , 
இருக்கிறாயே தவிர, 
என்னை சலிப்படைய, 
வைப்பதே இல்லை. நீ..


**
நான் கூட, 
அழகாய், 
இருக்கிறேன், 
என்று பொய், 
சொல்ல உன்னால்தான், 
முடியும் பெண்ணே.. 

இந்த பொய்கள்தான், 
உன்னிடம், 
எனக்கு பிடித்தது..


**
உன் பார்வையில், 
என்னை வெகு, 
அழகாய் வீழ்த்திவிட்டு, 
மௌனம் சுமப்பது, 
ஏனோ பெண்ணே ?


**உன் சுக, 
துக்கங்களில், 
பங்கு பெறுவது, 
நானாக மட்டுமே, 
இருக்க வேண்டும்.. 

அதற்காகத்தானே, 
இத்தனை காதல், 
போராட்டம், 
உன் பின்னே..


**
உன்னை தொடர்வதை, 
தவிர, 
மிக முக்கியமான, 
வேலைகள் பல இருந்தாலும், 
உன்னை, 
தொடர்வது மட்டுமே, 
பிடித்திருக்கிறது..

No comments: