என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday 2 June 2013

அவளை பிடித்திருக்கிறது..

அவளை பிடித்திருக்கிறது..

ஏதோ ஒரு ஆவல், 
அவளுடன் பேச தோன்றுகிறது..

ஆனால்,
நெருங்கினால் ஒரு படபடப்பு..

பரபரப்பான நகர தீவில்,
அவள் மட்டும்,
தனித்திருப்பதை போல,
உணர்கிறேன்.

ஏனோ,
சில நாட்களாய்,
மௌனம் கலந்த,
அவளின் குணம்,
நிரம்ப பிடித்திருக்கிறது.

என்னை ,
எப்படியோ வசீகரிக்கிறாள்.

காரணம்,
தேடவில்லை நான்.

காரணம் தேடினால்,
அவளை தொலைத்துவிடுவேனோ
என்ற பயமும் கூட..

அமைதியாய் இருக்கிறாள்,
சுற்றிலும் அவள் தோழியரின்,
சலசலப்பு இருந்தும்..

எனக்குள்ளே,
அவள் மிக உயர்ந்த இடத்தில,
சிம்மாசனமிட்டு,
அமர்ந்திருக்கிறாள்,
அமைதியாக..

மெல்ல அவள் வசம்,
நான் முழுதாய்,
சென்றுவிட்டேன்,
என்று மட்டும்,
நன்றாக புரிகிறது..

அவள்,
புனிதமானவள்.
அன்னையின் கரிசனமும்,
சகோதரியின் பாசமும்,
நிரம்ப பெற்றவள்,
என்ற என் கற்பனைகளில்,
நிச்சயம்,
உண்மை இருக்கிறது,
என்றே நினைக்கிறேன்..

உண்மை இருக்கும்..
ஏனென்றால்,
அவளின் பேரமைதியில்,
புனிதம் தனித்து,
தெரிகிறது..

No comments: