என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday 16 June 2013

காலை பொழுதின் மழை...

விடியலில் துவங்கிய, 
காலை பொழுதின், 
மழை, 
இதயம் நனைத்து, 
செல்கிறது.. 

பரபரவென்று விரையும், 
மழலை கூட்டம், 
மனதை ஈர்க்கிறது.. 

காலை நேர பரபரப்பில், 
பால்காரரின் சைக்கிள் 
மணி ஒலி,  
அதிர்கிறது... 

கடமையே கண்ணாக, 
பேப்பர்க்காரன் வீசி, 
சென்ற, 
பேப்பர் மலையில், 
நனைந்து சிரிக்கிறது..

மற்றுமொரு காலை, 
பொழுதில், 
என் வாழ்வியல் கழிகிறது.. 

நானும் விரைகிறேன், 
இனி, 
நேரமாகி விட்டது, 
வழக்கம் போல, 
ஒரு இயந்திர சூழலுக்கு.. 

No comments: