துளிகள் ( காதலோடு...)
அந்திமம் வரை
மறக்க இயலா
அழகான நினைவுகளை
தினம் கொடுத்து
செல்கிறாள், என்னவள்
என் காதல் பொழுதுகளில்..
****
பித்தன் இவன்
என்ற பெயரை
சுமந்து உலவுகிறேன்
இந்த சமூகத்தில்.
உன் மீது,
பித்தானவன் என்று,
உனக்கு மட்டும்தான்,
தெரியும்.
****
தொடர் பார்வை,
அம்புகளை,
என் மீது வீசி,
என்னை சிதைக்கிறாய்,
தினம்..
மௌனம் மட்டும்,
கலைப்பதில்லை,
என்றொரு விரதமும்,
பூண்டிருக்கிறாய்..
நீ என்னை,
சிதைப்பது,
பிடித்திருக்கிறது,
ஆனால், ,
உன் மௌனம் கசக்கிறது..
****
விடுமுறை நாளில்,
கூட பரபரக்கிறது மனது..
அவளை காண,
அவள் இல்லம் இருக்கும்,
வீதியில்,
என் பயணம் தொடர்கிறது,
நாள் முழுக்க..
அந்திமம் வரை
மறக்க இயலா
அழகான நினைவுகளை
தினம் கொடுத்து
செல்கிறாள், என்னவள்
என் காதல் பொழுதுகளில்..
****
பித்தன் இவன்
என்ற பெயரை
சுமந்து உலவுகிறேன்
இந்த சமூகத்தில்.
உன் மீது,
பித்தானவன் என்று,
உனக்கு மட்டும்தான்,
தெரியும்.
****
தொடர் பார்வை,
அம்புகளை,
என் மீது வீசி,
என்னை சிதைக்கிறாய்,
தினம்..
மௌனம் மட்டும்,
கலைப்பதில்லை,
என்றொரு விரதமும்,
பூண்டிருக்கிறாய்..
நீ என்னை,
சிதைப்பது,
பிடித்திருக்கிறது,
ஆனால், ,
உன் மௌனம் கசக்கிறது..
****
விடுமுறை நாளில்,
கூட பரபரக்கிறது மனது..
அவளை காண,
அவள் இல்லம் இருக்கும்,
வீதியில்,
என் பயணம் தொடர்கிறது,
நாள் முழுக்க..
No comments:
Post a Comment