என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday 2 June 2013

துளிகள் ( காதலோடு...)

துளிகள் ( காதலோடு...) 

அந்திமம் வரை
மறக்க இயலா
அழகான நினைவுகளை
தினம் கொடுத்து
செல்கிறாள், என்னவள்
என் காதல் பொழுதுகளில்..


****
பித்தன் இவன் 
என்ற பெயரை 
சுமந்து உலவுகிறேன் 
இந்த சமூகத்தில்.

உன் மீது, 
பித்தானவன் என்று,
உனக்கு மட்டும்தான்,
தெரியும்.


****
தொடர் பார்வை, 
அம்புகளை, 
என் மீது வீசி, 
என்னை சிதைக்கிறாய், 
தினம்.. 

மௌனம் மட்டும், 
கலைப்பதில்லை, 
என்றொரு விரதமும்,
பூண்டிருக்கிறாய்..

நீ என்னை,
சிதைப்பது,
பிடித்திருக்கிறது,
ஆனால், ,
உன் மௌனம் கசக்கிறது..


****
விடுமுறை நாளில்,
கூட பரபரக்கிறது மனது..

அவளை காண,
அவள் இல்லம் இருக்கும்,
வீதியில்,
என் பயணம் தொடர்கிறது,
நாள் முழுக்க..



No comments: