என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 18 June 2013

துளிகள்.. ( காதல் சொட்டு சொட்டாய்.. )

யாருமற்ற மலர் வனம், 
ஒன்றில், 
நாம் கொண்டாடிய, 
காதல் பொழுதுகளின், 
நினைவினில், 
நான் தித்திப்பாக, 
இந்த வினாடியில்.. 

***
மழைத்துளியில், 
நனைந்திடும் பெண்ணே, 
உன் அழகிய தோற்றம்,
கண்டு, 
பெரிதாய் வியக்கிறேன்.. 

இறைவன் அழகிய,
ரசனை உணர்வில்,
இருந்த போது,
உன்னை படைத்திருக்க வேண்டும்..

நீ எனக்கானவள்,
என்ற என் கனவு,
குதிரை புறப்பட்டு விட்டது,
நிஜத்தோடு காதலை,
உயிர்ப்பிக்க.


**
உன்னை முதன் முதலில்,
கண்ட,
ஒரு மழை நாளின்,
ஈரமும், குளிரும்,
இன்னமும்,
என்னுள்ளே இருக்கிறது..


**
உச்சி முதல்,
உள்ளங்கால் வரை,
உன்னை ரசிப்பதும்,
ஒரு அழகிய ரசனை,
உணர்வுதான்.. பெண்ணே..


**
உன்னை பிரிந்து விட்டேன்,
என்றால்,
என் உயிர் பிரிந்து விட்டது,
என்றே பொருள்படும்..

No comments: