என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 14 June 2013

துளி.. துளி.. காதல் துளி..

அலங்கரித்த தேரில் 
தேவதை போல, 
வருகிறாள், 
என்னவள், 
என் முன்னிரவு, 
கனவுகளில்.. 

**
ரசனையற்ற வாழ்வு, 
அபத்தம்.. 

உன்னை ரசித்திராமல், 
வாழ்ந்து விட்டால், 
என் வாழ்வும்,
அபத்தமே..


**
வீணான வாழ்வியல், 
நிமிடங்களில், 
உன் நினைவு சுமந்த, 
நிமிடங்களை மட்டும், 
வீண் என்று கருதாமல், 
பொக்கிஷமாய், 
பத்திரபடுத்தி வைத்திருக்கிறேன்..


**
அற்றை நாட்களின், 
அதிகாலை ஆலய, 
மண்டபங்களில், 
பரத கலை மிளிர, 
நடனமிடும், 
அழகிய பேரழகான,
பெண்ணாய்,
என் கனவுகளில்,
வந்து செல்கிறாய்..


**
இதுவரை,
பார்த்திராத உன்னை,
எனக்குள்,
ஒரு பேரழகு பெண்ணாய்,
உருவகம்,
செய்து வைத்திருக்கிறேன்..

தேவதைகளுள்,
மிக அழகானவள் நீ..

No comments: