என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday 16 June 2013

குளிர்ந்த இரவொன்றில்...(( துளிகள்.. ))

குளிர்ந்த இரவின், 
அணைப்பு, 
அதிகாலை வரை, 
தொடர்ந்தது, 
பெரும் காதலோடு..


**
குளிர்ந்த இரவொன்றில், 
விஸ்தாரமான புல்வெளியில், 
ஒரு போர்வையும், 
ஒரு மெத்தையும், 
ஒரு தலையணையும்,
கொண்டு,
உன் நினைவுகளில்,
என் உறக்கம்,
எனக்கு, அழகாய்,
வசப்படுகிறது..


**
குளிர்ந்த முன்னிரவு,
தீர்ந்து,
மெல்லிய சாரல்,
எட்டி பார்த்த,
பின்னிரவு வேளையில்,
உன்னுடனான என் ,
காதல் கனவுகள்,
கலைந்து,
சன்னல் வழியே,
தெறித்த சாரலை,
முகத்தில் உள்வாங்கி,
போர்வைக்குள்,
உன் நினைவை,
பத்திரப்படுத்துகிறேன்..


**
குளிரும் இரவில்,
கதகதப்பாய்,
உன் நினைவுகள்..


**
உன்னை போர்த்தியபடி,
குளிர்ந்த இரவின்,
குளிரை தவிர்க்கிறேன்..


**

No comments: