என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday 16 June 2013

** கனவு **

** கனவு ** 

அற்றை நாளின், 
ஏக்க கனவு, 
நிறைவேறி, 
விமானம் ஏறி, 
அயல் தேசத்தில், 
இறங்கிய இரு தினங்களுக்குள், 
என்னை துரத்துகிறார்கள், 
இருவர், 
என்னை கொல்வதற்கு.. 

உயிர் காக்க, 
வியர்த்து  நெடுந்தூரம், 
ஓடி களைத்தபோது, 
சுற்றி வளைக்கிறார்கள், 
என்னை.. 

நான் திடுக்கிட்டு, 
விழித்தேன்.. 

அதிகாலை 4.30 மணி
என்று கடிகாரம் காட்டியது, 
நேரத்தை.. 

No comments: