என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..
- அரவிந்த் ராமஸ்வாமி
- கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
- இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..
Tuesday 22 January 2013
மோகன புன்னகை
உன்,
மோகன புன்னகையில்,
மனம் தொலைத்து,
உன்,
அழகிய பிரியத்தால்,
உடல் நனைத்து,
தித்திப்பாய் நாட்கள்,
நகர்கிறதடி.
**
அழகிய நாட்டிய,
சிற்பம் போல,
உன் உடலழகை,
என் நினைவுகளில்,
பதிந்து வைத்திருக்கிறேன்.
அழகிய அந்த சிற்பத்துடன்..
காதல்உரையாடல்,
தினம் தொடர்கிறது...
**
பௌர்ணமி நிலவை,
உருவகம் செய்து,
வைத்திருக்கிறேன்,
உன் வட்ட முகத்தை...
கயல் விழியாள் என்றும்,
உருவகபடுத்தி வைத்திருக்கிறேன்,
உன் படபடவென்ற விழிகளை..
இன்னமும்,
அழகிய உவமைகள்,
பிறந்து கொண்டே இருக்கின்றன,
உன் நினைவுகள்,
வந்த பொழுதெல்லாம்..
**
* துளிகள் ( காதல் சுமந்து ) *
* துளிகள் *
அழகிய நாட்டிய,
சிற்பமாய்,
உன் உருவம்,
என்னுள் பதிந்து,
கிடக்கிறது.
சிற்பம் உயிர்பெற்று,
காதலை தரும்,
என்றொரு எதிர்பார்ப்பில் ,
காத்திருக்கிறது,
என் உள்ளம்.
**
தினம்,
என்னுள் இருந்து,
நீயே,
என்னை இயக்குகிறாய்.
என் செயல்கள்,
மிக சிறப்பாய் வடிவெடுக்கிறது,
சமீபமாய்.
**
எனக்குள் கவிதைகள்,
பிறக்க துவங்கிய பொழுது,
நான்,
முழுதாய் உன்னில்,
காதல் கொண்டிருந்தேன்..
**
தினம் உன் நினைவலைகளில்,
என் தனிமை இரவுகள்,
அழகாய் கழிகிறது...
* துளிகள் ( காதலாகி ) *
* துளிகள் *
தீராத பிரியம்,
குளிர்ந்த முன்னிரவின்,
உன் பெயரோடு,
உன்னை என்னவென்று,
காதல் இல்லாது,
தீராத பிரியம்,
தீராத சிநேகம்,
தீராத காதலாய்,
தொடர்ந்து தொடர்கிறது..
மகிழ்வான நாட்கள்,
மிக மகிழ்வாக தொடர்கிறது..
**
குளிர்ந்த முன்னிரவின்,
போர்வையின் அடியில்,
உன் நினைவுகள் சுமந்து,
உறங்க தயாராகிறேன்,
கனவிலும் உன்னை,
காண்பதற்கு..
**
உன் பெயரோடு,
இணைந்திருக்கும்,
உன் புன்னகையை,
கண்ணீர் அழித்திடாமல்,
காக்கும் கடமையில்,
என்னை ,
நான் செதுக்கி கொண்டிருக்கிறேன்..
**
உன்னை என்னவென்று,
வர்ணிப்பது?
எதுவும் தோணவில்லை..
ஆனால்,
உன்னால்,
நான் மிக மகிழ்வோடு,
தினம் உலவுகிறேன்,
இந்த வசந்த பூமியில்..
**
காதல் இல்லாது,
உலகம் இல்லை.
நீ இல்லாது,
நான் இல்லை..
உயிர் இல்லாது,
உடல் இல்லை.
இனிக்கிறது வாழ்க்கை,
நம் மலர்வான காதலால்.
* துளிகள் *
* துளிகள் *
உன்னை சுற்றிய,
அன்பை பேசும்,
சட்டென்று,
தொடரும் காலங்கள்,
உன்னை சுற்றிய,
என் பிரியத்தை,
உணராது,
வேறு எங்கோ வாசம் செய்கிறாய்.
என் தூய அன்பு,
உனக்கு புரியும் நாளில்,
நான் உன்னை விட்டு,
வெகு தூரம் சென்றிருப்பேன்.
முடிந்தவரை,
இப்பொழுதே உணர்ந்துவிடு,
என் பேரன்பை.
**
அன்பை பேசும்,
அழகிய,
உன் உருவம்,
மிக அற்புதமாய்,
ஆழ பதிந்து விட்டது,
என்னுள்.
இனி,
என்னுள் உன் உருவம்,
உன் நினைவு,
என்றும் அழியாது..
தொடரும் நாட்களில்,
இனி, உன்னை,
சுமந்தபடி,
என் பயணம் தொடரும்.
**
சட்டென்று,
தேகமெங்கும் பரவிய,
சிலிர்ப்பு,
அழகிய கலவை,
உணர்ச்சிகளை சுமந்து,
ஆர்பரிக்க வைத்தது,
சில விநாடி நேரம்..
வினாடி நேரத்தில்,
ஒரு புன்னகை வைத்து,
எனை பார்த்து,
நீ தலை குனிந்த,
வினாடியில்,
என்னுள் உண்டான,
அழகிய உணர்வலைகள், அவை.
**
தொடரும் காலங்கள்,
உன்னுடன் இணைந்தே,
விரையும் இனி..
உன் மீது நான் கொண்ட,
பிரியம் இனி,
உச்சம் தொடும்.
அதனால் வாழ்வியல்,
மிக அழகாய் நகரும்.
என் கனவுகள் தினம்,
இதுவே.
கனவுகள் உயிர்பெறும் நாளை,
நோக்கி தவிப்பு தொடர்கிறது.
என் மீது பிரியம் கொள்ள,
உன் மௌனம் கலைத்துவிடு..
Subscribe to:
Posts (Atom)