* துளிகள் *
தீராத பிரியம்,
தீராத சிநேகம்,
தீராத காதலாய்,
தொடர்ந்து தொடர்கிறது..
மகிழ்வான நாட்கள்,
மிக மகிழ்வாக தொடர்கிறது..
**
குளிர்ந்த முன்னிரவின்,
போர்வையின் அடியில்,
உன் நினைவுகள் சுமந்து,
உறங்க தயாராகிறேன்,
கனவிலும் உன்னை,
காண்பதற்கு..
**
உன் பெயரோடு,
இணைந்திருக்கும்,
உன் புன்னகையை,
கண்ணீர் அழித்திடாமல்,
காக்கும் கடமையில்,
என்னை ,
நான் செதுக்கி கொண்டிருக்கிறேன்..
**
உன்னை என்னவென்று,
வர்ணிப்பது?
எதுவும் தோணவில்லை..
ஆனால்,
உன்னால்,
நான் மிக மகிழ்வோடு,
தினம் உலவுகிறேன்,
இந்த வசந்த பூமியில்..
**
காதல் இல்லாது,
உலகம் இல்லை.
நீ இல்லாது,
நான் இல்லை..
உயிர் இல்லாது,
உடல் இல்லை.
இனிக்கிறது வாழ்க்கை,
நம் மலர்வான காதலால்.
No comments:
Post a Comment