என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 22 January 2013

* துளிகள் ( காதலாகி ) *

* துளிகள் *

தீராத பிரியம்,
தீராத சிநேகம்,
தீராத காதலாய்,
தொடர்ந்து தொடர்கிறது..

மகிழ்வான நாட்கள்,
மிக மகிழ்வாக தொடர்கிறது.. 
 **
குளிர்ந்த முன்னிரவின்,
போர்வையின் அடியில்,
உன் நினைவுகள் சுமந்து,
உறங்க தயாராகிறேன்,
கனவிலும் உன்னை,
காண்பதற்கு..
**
உன் பெயரோடு,
இணைந்திருக்கும்,
உன் புன்னகையை,
கண்ணீர் அழித்திடாமல்,
காக்கும் கடமையில்,
என்னை ,
நான் செதுக்கி கொண்டிருக்கிறேன்..
**
உன்னை என்னவென்று,
வர்ணிப்பது?
எதுவும் தோணவில்லை..

ஆனால்,
உன்னால்,
நான் மிக மகிழ்வோடு,
தினம் உலவுகிறேன்,
இந்த வசந்த பூமியில்..
**
காதல் இல்லாது,
உலகம் இல்லை.

நீ இல்லாது,
நான் இல்லை..

உயிர் இல்லாது,
உடல் இல்லை.

இனிக்கிறது வாழ்க்கை,
நம் மலர்வான காதலால்.
 
 
 
 
 

No comments: