என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 22 January 2013

* துளிகள் ( காதல் சுமந்து ) *

 * துளிகள் *
அழகிய நாட்டிய,
சிற்பமாய்,
உன் உருவம்,
என்னுள் பதிந்து,
கிடக்கிறது.

சிற்பம் உயிர்பெற்று,
காதலை தரும்,
என்றொரு எதிர்பார்ப்பில் ,
காத்திருக்கிறது,
என் உள்ளம்.
**
தினம்,
என்னுள் இருந்து,
நீயே,
என்னை இயக்குகிறாய்.

என் செயல்கள்,
மிக சிறப்பாய் வடிவெடுக்கிறது,
சமீபமாய்.
 **
எனக்குள் கவிதைகள்,
பிறக்க துவங்கிய பொழுது,
நான்,
முழுதாய் உன்னில்,
காதல் கொண்டிருந்தேன்..
**
தினம் உன் நினைவலைகளில்,
என் தனிமை இரவுகள்,
அழகாய் கழிகிறது...
 
 
 

No comments: