** காதலை நாடி * *
என் காதல் தேசத்தில்,
வித விதமாய்,
தினம்,
பூத்து குலுங்குகிறாய்...
உன்னை தொடாமலே,
அழகாய் ரசிக்கிறேன்,
இதயம் கொண்டு..
**
உனக்கான,
என் கவிதைகள்,
இன்னமும் நிறைய,
காத்திருக்கிறது..
உன் மௌனம் கலைத்த,
பின்னே,
வரிசையாக தொடரும்,
என், உனக்கான கவிதைகள்..
**
எனக்கென்று ஒரு கனவு,
அதில் என்றும்,
நீ தேவதையாக..
நான் உன் ,
சேவகனாக..
கனவுகள் தினம் தொடர,
ஆசை எனக்கு..
**
விருப்பம் ஒளித்து,
என்னை மறந்திட,
முயற்சிக்கிறாய்.
ஆனாலும்,
முடியாது நீ,
போராடுவதை அறிவேன்..
சுலபத்தில் மறந்திடுமா என்ன...
ஆனாலும்,
உன் மீது கோபம் இல்லை.
**
அதிகாலை,
வெண் பனியில்,
ஒற்றி எடுத்த ,
ரோஜா இதழை போல,
உன் நினைவுகள்,
என்றும் இதமாய்,
எனக்குள்..
No comments:
Post a Comment