என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 22 January 2013

* காதலை நாடி *

** காதலை நாடி * *
என் காதல் தேசத்தில்,

வித விதமாய்,

தினம்,

பூத்து குலுங்குகிறாய்...

உன்னை தொடாமலே,

அழகாய் ரசிக்கிறேன்,

இதயம் கொண்டு..
**
உனக்கான,

என் கவிதைகள்,

இன்னமும் நிறைய,

காத்திருக்கிறது..

உன் மௌனம் கலைத்த,

பின்னே,

வரிசையாக தொடரும்,

என், உனக்கான கவிதைகள்..
 
**
எனக்கென்று ஒரு கனவு,

அதில் என்றும்,

நீ தேவதையாக..

நான் உன் ,

சேவகனாக..

கனவுகள் தினம் தொடர,

ஆசை எனக்கு..
 
**
விருப்பம் ஒளித்து,

என்னை மறந்திட,

முயற்சிக்கிறாய்.

ஆனாலும்,

முடியாது நீ,

போராடுவதை அறிவேன்..

சுலபத்தில் மறந்திடுமா என்ன...

ஆனாலும்,

உன் மீது கோபம் இல்லை.
**
அதிகாலை,

வெண் பனியில்,

ஒற்றி எடுத்த ,

ரோஜா இதழை போல,

உன் நினைவுகள்,

என்றும் இதமாய்,

எனக்குள்..
 
 
 
 

No comments: