என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 22 January 2013

மோகன புன்னகை

உன்,
மோகன புன்னகையில்,
மனம் தொலைத்து,
உன்,
அழகிய பிரியத்தால்,
உடல் நனைத்து,
தித்திப்பாய் நாட்கள்,
நகர்கிறதடி.
**
அழகிய நாட்டிய,
சிற்பம் போல,
உன் உடலழகை,
என் நினைவுகளில்,
பதிந்து வைத்திருக்கிறேன்.

அழகிய அந்த சிற்பத்துடன்..
காதல்உரையாடல்,
தினம் தொடர்கிறது...
**
பௌர்ணமி நிலவை,
உருவகம் செய்து,
வைத்திருக்கிறேன்,
உன் வட்ட முகத்தை...

கயல் விழியாள் என்றும்,
உருவகபடுத்தி வைத்திருக்கிறேன்,
உன் படபடவென்ற விழிகளை..

இன்னமும்,
அழகிய உவமைகள்,
பிறந்து கொண்டே இருக்கின்றன,
உன் நினைவுகள்,
வந்த பொழுதெல்லாம்..
**
 
 
 
 
 
 

No comments: