உன்,
மோகன புன்னகையில்,
மனம் தொலைத்து,
உன்,
அழகிய பிரியத்தால்,
உடல் நனைத்து,
தித்திப்பாய் நாட்கள்,
நகர்கிறதடி.
**
அழகிய நாட்டிய,
சிற்பம் போல,
உன் உடலழகை,
என் நினைவுகளில்,
பதிந்து வைத்திருக்கிறேன்.
அழகிய அந்த சிற்பத்துடன்..
காதல்உரையாடல்,
தினம் தொடர்கிறது...
**
பௌர்ணமி நிலவை,
உருவகம் செய்து,
வைத்திருக்கிறேன்,
உன் வட்ட முகத்தை...
கயல் விழியாள் என்றும்,
உருவகபடுத்தி வைத்திருக்கிறேன்,
உன் படபடவென்ற விழிகளை..
இன்னமும்,
அழகிய உவமைகள்,
பிறந்து கொண்டே இருக்கின்றன,
உன் நினைவுகள்,
வந்த பொழுதெல்லாம்..
**
No comments:
Post a Comment