என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday 2 June 2013

காதல் கணங்கள்..


நீண்டதொரு காலத்திற்கு
பின் உடல் அழகாய்
சிலிர்த்து குளிர்ந்தது..

நான் கூட
முதன் முதலாய்
பேரானந்தம் கொண்டவனாய்
இருக்கிறேன்..

எனக்குள் அலையடிக்கும்
உணர்வுகள் அனைத்திலும்
மகிழ்ச்சி தவிர
வேறு எதுவும் இல்லை..

புத்தம் புதிதாய்
என்னை உணர்ந்தேன்...

இந்த நிமிடத்தில்
உலகில் நான் மட்டுமே
பெரும் மகிழ்வானவன்..

எனக்குள் பெருமையும்
சந்தோசமும் மாறி மாறி
அணைத்து கொண்டிருந்தன..

பிறந்த நாளில் இருந்து
அன்னையின் கதகதப்பில்
மழலை தீர்த்து,
பின் தந்தையின் அன்பில்
இளமை தொட்டு
தங்கையின் குறும்பில்
மகிழ்ச்சி கொண்டு
திரிந்ததை விட
மிக புதிதாய் ஒரு
மகிழ்வான உணர்வில்
இப்போது நான்..

எனக்கே என்னை
மிக பிடித்திருக்கிறது..

என்னுள் இருந்த
சோர்வு சோம்பல்
தீய பழக்கங்கள்
யாவும்,
மெல்ல அகன்று
நல்ல மனிதனாய்
உருபெற்று இருப்பதை
நினைக்கையில்
பெரு மகிழ்வு
கொண்டேன்..

இந்த வானம்,
இயற்கை யாவும்
முழுதாய் உணர்ந்து
ரசிக்கிறேன் முதன் முதலாய்..

நானும்,
என் மனதும் மிக
அழகாய் இருப்பதாய்
உணர்கிறேன்.

ஆம்,
நான் காதல் வயப்பட்டு இருக்கிறேன்..

அவளை முதன் முதலில்
கண்ட நாளில் இருந்து
அவள் கவனம் பெற
தொடர்ந்து
பின்,
அவள் காதல் சம்மதம்
பெற்ற நாளில் இருந்து
நான் இப்படிதான் இருக்கிறேன்..

இன்று இன்னும் மகிழ்வாய்
என்னவளோடு காதலை
கொண்டாடிட
முதன் முதலாய்
இந்த மலை பிரதேசத்தில்
சங்கமித்திருக்கிறோம்..

சந்தோஷ தருணங்களை
பரிசாய் கொடுத்து கொண்டிருக்கிறது
இந்த அழகான காதல்
இப்போது..

No comments: