என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday 2 June 2013

காதலில் விழுந்து..

ஒவ்வொரு முறையும், 
பதட்டத்தில் 
அலைபாயும், 
உன் விழிகளை,
வெகுவாக ரசிக்கிறேன்.

மெல்லிய தென்றலுக்கு,
முன் நெற்றியில் புரண்டு,
விழும் கூந்தலையும்,
ரசிக்கிறேன்..

நீ சற்றே பதட்டம்,
சுமந்து,
அதில் காதலும் சுமந்து,
பேசுகிறபோது,
அசையும் உன் இதழ்களை,
ரசிக்கிறேன்..

பதட்டத்தில் சிவக்கும்,
உன் ஈர ரோஜா,
கன்னங்களை,
முத்தமிட்டு விடலாம்,
என்றும் தோன்றுகிறது..

விழிகளின் மீது,
படர்ந்திருக்கும்,
கண்ணிமை முடிகளை,
மெலிதாய் வருட,
வேண்டும் போல,
இருக்கிறது..

உன் பதட்டம்,
கூட கூட,
நான் உன்னை,
மிக மிக,
ரசிக்கிறேன்..

நம் காதலை,
வெகு அழகாய்,
காதல் பொழுதுகளில்,
சற்றே பதட்டம்,
கொண்டு,
வளர்க்கிறாய்..

உன் பதட்டம்,
சுமந்த
காதலை,
நான் வெகுவாய்,
ரசிப்பினும்,
உன் மீது சிறு,
குறை இருக்கிறது..

உன்னை காத்திட,
நானிருக்கையில்,
வேறு யாரேனும்,
பார்த்துவிடுவரோ,
நம் காதல் பொழுதுகளை,
என்ற பதட்டம்,
உனக்கெதற்கு..

நான் இருக்கிறேன்,
உன்னை அழகாய்,
ரசித்திட,
உன்னை அழகாய்,
என் வாழ்வில்,
சுமந்திட.. 

No comments: