என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday 2 June 2013

துளிகள் ( காதலுடன் )

துளிகள் ( காதலுடன்  ) ..

இனி ஒரு பிறவி, 
வேண்டாம்.. 


இந்த பிறவியில், 
முழுமையாய், 
ஆழ்ந்த காதலோடு, 
உன்னோடு வாழ்ந்து, 
முடித்தாலே போதும்..


நான் நிம்மதி, 
கொள்வேன்..


****
உன்னை விரும்பி, 
உன் மீது, 
காதல் கொண்டதால், 
மட்டுமே, 
நான் புதிதாய், 
பேரழகு மனம், 
கொண்டவனாய்,
பிறந்திருப்பதை போல,
உணர்கிறேன்..


****
இப்போதைக்கு,
உன்னை மேலும்,
மேலும்,
ஆழமாய் நேசித்திட,
சிந்திப்பதை தவிர,
வேறு எதையும்,
நான் சிந்திப்பதில்லை..


***
பேரழகான உன்னை,
மலர் தூவி,
வரவேற்க,
அழகிய பச்சை,
புல்வெளியை,
தேடி கொண்டிருக்கிறேன்..


****
இந்த காதலில்,
கிடைத்திருக்கும்,
அளவற்ற பேரன்பு,
அழகிய ரசனை உணர்வு,
என்னை,
எனக்கே மிக,
பிடித்திருக்க செய்கிறது..


No comments: