என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday 2 June 2013

காதல் பொழுதுகள்.



காதல் பொழுதுகள்.

பின்னிரவு தீரும்,
வேளையில்தான்,
சற்றே அசதியில்,
உறங்கி போனேன்..

முன்னிரவு துவங்கி,
பின்னிரவு வரையில்,
கடற்கரை மணலில்,
தனியே,
வானம் வெறித்து,
படுத்திருந்தேன்..

என்னுள் வேறு,
எந்த நினைவுகளும்,
இல்லை.

உன்னை பற்றி,
உன் மீதான,
என் ஆழ்ந்த காதல் பற்றி,
மட்டுமே நினைத்து,
கொண்டிருந்தேன்.

உணர்வுகளே இன்றி,
பட்டென்று மறுத்து,
சொல்ல எப்படி,
உனக்கு மனது,
வந்தது என்றுதான்,
புரியவில்லை..

பெண்கள் சில கணங்களில்,
இப்படிதான்,
அருகிலிருப்போர் மனம் ,
வலிப்பதை உணராது,
சென்று விடுவர்..

ஆனால்,
காலம் என்ற ஒன்று,
இருக்கிறதே,
அது மகா பெரிய,
ஞானி..

நிச்சயம் உன்னை,
மாற்றி விடும்.

என் மீது பிரியம்,
கொள்ளும்படி,
அந்த காலம்,
உனக்கு கட்டளையிடும்.

காதல்,
திருமணத்தில் முடியும்.

எனக்கு நம்பிக்கை,
நிறைய இருக்கிறது..

இன்று நீ,
என்னை வெறுத்து,
அல்லது ஒதுக்கி,
சென்று விடலாம்.

ஆனால்,
தொடரும் என் தொடர்தல்,
கண்டு,
காலம் உன்னை,
என் பக்கம் வீழ்த்தி விடும்..

இது நடக்கும்..
ஏனென்றால்,
இதுதான் இயற்கை..
இதுதான் காதல்..

No comments: