என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday 2 June 2013

திகட்ட திகட்ட காதல் துளிகள்.

திகட்ட திகட்ட காதல் துளிகள். ..

உன்னை விரும்புவதை விட, 
வேறென்ன, 
எனக்கு பிடித்தமானதாய், 
இருக்கமுடியும்..


****
நினைக்க நினைக்க, 
உன்னை பற்றி, 
உன் பேரழகை பற்றி, 
வர்ணித்திட , 
ஆயிரமாயிரம் அழகிய, 
சொற்கள், 
பிறப்பெடுத்து கொண்டே, 
இருக்கின்றன..


****
நான் உயிர்த்திருப்பேன் , 
என் கல்லறையில், 
உன் நினைவுகளோடு.


****
என் சிநேகிதியே, 
உன் மீது, 
ஒரு அழகிய சிநேகம், 
கொண்டு,
காத்திருக்கிறேன்,
உன் காதலுக்காக..


****
கடலலைகள் கால்,
நனைக்க,
முன்னை விட,
மிக நெருக்கமாய்,
நம் மீது,
ஈரம் படர்ந்திருக்க,
வளர்கிறது,
அழகிய காதல்..


****
உன் நினைவுகளை,
சுமந்து,
திரியும்,
என் கனவுகள்,
என்றுமே,
இதம்..



No comments: