என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 4 August 2012

காற்றே நீ போ

அம்மா..

மொட்டை மாடியில்,,

துணி உலர்த்தி கொண்டு இருந்தாள்..

காற்றில் படபடத்தன,,

துணிகள்..

**
பறந்து செல்ல எத்தனித்த துணிகளை,,

போராடி,,

உலர்த்தி கொண்டிருந்தாள்..

அருகில் நின்றிருந்த,,

அவளின் இரண்டரை வயது அன்பு மகனுக்கு,,

தாய் சிரமப்படுவதை கண்டு,,

வருத்தம்..

**
வருத்தம் கோபமாக மாறி,,

சுழற்றி அடித்த காற்றை நோக்கி,,

' காற்றே நீ போ,,

கிட்ட வந்தே தொலைச்சுடுவேன் "

என்று காற்றை மிரட்டி ,,

காற்றுடன் போராடினான்..

**
இதை கண்ட தாய்க்கு,,

அப்படி ஒரு மகிழ்வு..

மகனின் மீது..

****
பி.கு :

என் வீட்டில் நடந்த நிகழ்வு இது..
**

No comments: