என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 29 August 2012

சிறு புள்ளியாய் நான்......

பின்னிரவின்,,

நிசப்தம் சிலிர்த்தது....

உடல் கோரை பாயில் படுத்திருக்க,,

வானமே கூரையாய்,

மொட்டை மாடியில்,,

உறக்கம் தடைபெற,,

விழித்திருந்தேன்..

**
வானம்,

கருமை நிறத்தோடு,,

எண்ணற்ற விண்மீன்களை,,

தன்னுள்ளே கொண்டு,,

வட்ட நிலவையும்,,

தனக்குள்ளே வைத்து,,

மெல்லிய வெளிச்சத்தால்,,

என்னையும்,,

பூமியையும் ஒருசேர,

நனைத்து கொண்டு இருந்தது..

**
நான்,,

மனம் நிறைய கேள்விகளோடு,,

வானம் பார்த்தபடி,,

ஓரளவிற்கு பிரபஞ்சம் அளந்தபடி,,

கண்ணில் தெரியாத,,

சிறு புள்ளியாய்,,

புரண்டு கொண்டிருந்தேன்,,

**
பிரபஞ்சத்தில்,,

கலந்துவிட போகும்,,

இந்த உடலோடு,,

இந்த ஆன்மாவும்,,

ஏனோ சோர்வுற்று இருந்தது,,

விடை அறியாது..

No comments: