பின்னிரவின்,,
நிசப்தம் சிலிர்த்தது....
உடல் கோரை பாயில் படுத்திருக்க,,
வானமே கூரையாய்,
மொட்டை மாடியில்,,
உறக்கம் தடைபெற,,
விழித்திருந்தேன்..
**
வானம்,
கருமை நிறத்தோடு,,
எண்ணற்ற விண்மீன்களை,,
தன்னுள்ளே கொண்டு,,
வட்ட நிலவையும்,,
தனக்குள்ளே வைத்து,,
மெல்லிய வெளிச்சத்தால்,,
என்னையும்,,
பூமியையும் ஒருசேர,
நனைத்து கொண்டு இருந்தது..
**
நான்,,
மனம் நிறைய கேள்விகளோடு,,
வானம் பார்த்தபடி,,
ஓரளவிற்கு பிரபஞ்சம் அளந்தபடி,,
கண்ணில் தெரியாத,,
சிறு புள்ளியாய்,,
புரண்டு கொண்டிருந்தேன்,,
**
பிரபஞ்சத்தில்,,
கலந்துவிட போகும்,,
இந்த உடலோடு,,
இந்த ஆன்மாவும்,,
ஏனோ சோர்வுற்று இருந்தது,,
விடை அறியாது..
வானமே கூரையாய்,
மொட்டை மாடியில்,,
உறக்கம் தடைபெற,,
விழித்திருந்தேன்..
**
வானம்,
கருமை நிறத்தோடு,,
எண்ணற்ற விண்மீன்களை,,
தன்னுள்ளே கொண்டு,,
வட்ட நிலவையும்,,
தனக்குள்ளே வைத்து,,
மெல்லிய வெளிச்சத்தால்,,
என்னையும்,,
பூமியையும் ஒருசேர,
நனைத்து கொண்டு இருந்தது..
**
நான்,,
மனம் நிறைய கேள்விகளோடு,,
வானம் பார்த்தபடி,,
ஓரளவிற்கு பிரபஞ்சம் அளந்தபடி,,
கண்ணில் தெரியாத,,
சிறு புள்ளியாய்,,
புரண்டு கொண்டிருந்தேன்,,
**
பிரபஞ்சத்தில்,,
கலந்துவிட போகும்,,
இந்த உடலோடு,,
இந்த ஆன்மாவும்,,
ஏனோ சோர்வுற்று இருந்தது,,
விடை அறியாது..
No comments:
Post a Comment