என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 10 August 2012

அவர்களுக்கு, தெரியவில்லை

அவர்களுக்கு, தெரியவில்லை..

பிழைக்க தெரியவில்லை..

சொத்தும் சுகமும்தான் பெரியது,,

என்று எண்ணவில்லை..

**
அவர்கள் பாவம்,,

கள்ளம்,, கபடு, சூது, அறியாது,,

வாழ்ந்து சிறை சென்று,,

கொடுமைகளை அனுபவித்தார்கள்..

**
இன்றுள்ளவர்களை போல,

சொத்து சுகம் என்று அனுபவிக்க தெரியவில்லை,.

தன் குடும்பம்தான் பெரிதென எண்ண தோன்றவில்லை..

பாவம் அவர்கள்..

இருந்த ஒரே வாழ்க்கையையும்,,

சுதந்திர போராட்டத்திற்காக தியாகம்,

செய்து விட்டார்கள்.

**
பாவம் அவர்கள்..

இந்த மக்களை பற்றி தெரியவில்லை..

இப்படிப்பட்ட அரசியல்வாதிகளைத்தான்,,

தேர்ந்தெடுப்பார்கள் என்று,,

அன்றே தெரிந்திருந்தால்,,

பாவம் அவர்கள் வேலையாவது பார்த்திருப்பார்கள்..

**
எது எப்படியோ..

அந்த முகம் தெரிந்த,, தெரியாத,,

சுதந்திர போராட்ட தியாகிகளை..

அவர்தம் தியாகங்களை,,

மக்களாகிய நாம் கொச்சை படுத்திவிட்டோம்..

**
ஆம், தவறு நம்மேல்தான்..

அரசியல்வாதிகளை குறை கூறி,,

இனி ஒன்றும் ஆக போவதில்லை..

*
வாழ்க சுதந்திரம்..

No comments: