என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 10 August 2012

சாதாரணமானவர்கள்

இன்னும் சில தூரம்,,

முடிந்து விடும் வாழ்க்கை..


**


உடலற்ற ஆன்மா,,

பரந்து விரிந்த பிரபஞ்சத்தில்,


ஆனந்தமாக திரியும்..


**

இங்கே,,

வாழ்ந்த காலத்தின் ,,


அழியாத நினைவுகளோடு,,


நேசம் கொண்ட உறவுகள்,,


வாழ்ந்து கொண்டு இருக்கும்,,


**

இந்த பிரபஞ்சத்தின்,,

ஒரு கோடியில் இருந்து,,


மறு கோடி வரை,,


ஆன்மா அலைந்து திரிந்து,,


மீண்டும் பிறப்பெடுக்கும்,


ஓர்நாள்...


**

அது,,

உடலோடு,


மனிதனாகவோ,,


அல்லது விலங்காகவோ..


அல்லது,,


ஆன்மா, மரித்தும் போகலாம்..


**

இறுதியில்,,

நான் இல்லை..


எதுவும் இல்லை..


உயிர் இல்லை,,


உடல் இல்லை,,


ஆன்மா இல்லை..


**

நாம்,,

ஏதோ ஒரு சக்திக்கு,,


கட்டுப்படும்,,


மிக சாதாரணமானவர்கள்..

No comments: