என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 4 August 2012

பாரீசிலிருந்து......




நேற்று முன்தினம்தான்,,

பாரீசிலிருந்து கிளம்பினேன்..

அதற்குள் ,,

ரியோ டி ஜெனீரோ வில்,,

ஒரு கருத்தரங்கம்,,

இருப்பதை நினைவு படுத்தினார் என் காரியதரிசி..

**
உடனே அங்கு சென்று,,

ஆலோசனை முடித்துவிட்டு,,

அங்கிருந்து,,

அர்ஜென்டினா சென்று,,

மரடோனவை பார்த்து,,

அவருடன் ஒரு நாள்,,

ஊர் சுற்றி பார்த்துவிட்டு,,

ஊர் திரும்பலாம்,,

என்று நினைத்த வேளையில்,,

டொராண்டோவில் இருந்து,,

நண்பர் ஒருவர் போன்..

**
அவசியம் வரசொன்னதால்,

அங்கு சென்றுவிட்டு,,

வரும் வழியில்,,

துபாய் நண்பர்களை சந்தித்து,,

பிறகு,,

ஊர் வந்ததும்,,

அடுத்த நிமிடமே (??!!)

அலுவலக வேலையாக,,

நியூசிலாந்து நாட்டின்,,

வெலிங்டன் நகருக்கு செல்லும்,,

சூழல்..

**
ஒரு வழியாக முடித்துவிட்டு,,

சிட்னி சென்று,,

காலை உணவருந்தி,,

மதிய உணவிர்க்குள் சிங்கப்பூர் சென்றுவிடும்,,

அவசரத்தில் பயணித்தேன்..

**
சிங்கப்பூரில் மதிய உணவருந்தி,,

சென்னை வந்து சேர்ந்தபோது,,

மாலை தேநீர் நேரம்..

தேநீர் அருந்திவிட்டு,,

கோயம்புத்தூர் செல்ல காத்திருந்தேன்..

**
ரயில் வந்ததும் ஏறி,,

கோயம்புத்தூர் வந்து சேர்வதற்குள்,

பொழுது விடிந்து,,

உறக்கம் கலைந்தது..

No comments: