மெல்ல விடுபட்டேன்,,
உறக்கத்தின் பிடியிலிருந்து..
குளிர்ந்த நீரால்,,
முகம் கழுவி,,
தொலை தூரம் செல்ல,,
ஆயத்தமானேன்..
**
இந்த பின்னிரவு பொழுதுகளில்,,
தனியே சுற்றுவது,,
நிரம்ப பிடிக்கும்..
அதுவும்,,
வனம் சார்ந்த பகுதிகள் பிடிக்கும்..
**
நிச்சய ஆபத்து,,
அங்கே அந்த வனத்தினூடே காத்திருக்கும்..
இருப்பினும்,,
அங்கு செல்லத்தான் மனது,,
இந்த பின்னிரவில்,
பிரியப்படுகிறது..
**
விரைந்தேன்.,,
நகரை பின்னோக்கி நகர்த்தியபடி..
வனம் வந்தது..
**
கடும் வெப்பத்தில்,,
வியர்த்த உடலில்,
சட்டென்று அடித்த தென்றலை,,
போல ஒரு உணர்வு..
**
வெகு ஜாக்கிரதையாக,,
காலடி வைத்தேன், வனத்தினுள்..
நிதானம்,, என்னுள்ளே,
சற்றே விழிப்பும் கூட..
**
சரசரவென்ற புற்களின்,,
சப்தம் தேவை இன்றி,,
சர்ப்பத்தை நினைவூட்டியது..
பார்த்து பார்த்து ,,
நிசப்தம் கெடாது,,
என் காலடி எடுத்து வைத்தேன்..
**
மிருகங்களின் வாசனை வேறு,,
ஆங்காங்கே உணர்ந்தேன்..
மெல்ல மெல்ல முன்னேறினேன்...
கலவையான உணர்ச்சிகளோடு,
ஒரு அடர்ந்த பகுதியை ,,
அடைந்தேன்..
**
விலங்குகளுக்கு தெரிந்திருக்கும்,,
யாரோ ஒரு மனிதன் உள்ளே,,
நுழைந்துவிட்டான் என்று..
இருப்பினும் அமைதி காத்தன,,
மனிதன் நிச்சயம் தவறு செய்வான்,,
அப்போது தாக்கி கொள்ளலாம் என்று,,
நினைத்திருக்கும் போல..
**
அடர்ந்த புதர் ஓரமாக,,
தெரிந்த சிறு சமவெளி,,
புல்வெளியை நோக்கி,,
மெல்ல முன்னேறி கொண்டு ,,
இருந்தேன்..
**
நேரம் செல்ல செல்ல,,
பின்னிரவின் இருளில்,,
வனத்தினுள்ளே,,
முழுதாக,,
மறைந்தேன்..
உறக்கத்தின் பிடியிலிருந்து..
குளிர்ந்த நீரால்,,
முகம் கழுவி,,
தொலை தூரம் செல்ல,,
ஆயத்தமானேன்..
**
இந்த பின்னிரவு பொழுதுகளில்,,
தனியே சுற்றுவது,,
நிரம்ப பிடிக்கும்..
அதுவும்,,
வனம் சார்ந்த பகுதிகள் பிடிக்கும்..
**
நிச்சய ஆபத்து,,
அங்கே அந்த வனத்தினூடே காத்திருக்கும்..
இருப்பினும்,,
அங்கு செல்லத்தான் மனது,,
இந்த பின்னிரவில்,
பிரியப்படுகிறது..
**
விரைந்தேன்.,,
நகரை பின்னோக்கி நகர்த்தியபடி..
வனம் வந்தது..
**
கடும் வெப்பத்தில்,,
வியர்த்த உடலில்,
சட்டென்று அடித்த தென்றலை,,
போல ஒரு உணர்வு..
**
வெகு ஜாக்கிரதையாக,,
காலடி வைத்தேன், வனத்தினுள்..
நிதானம்,, என்னுள்ளே,
சற்றே விழிப்பும் கூட..
**
சரசரவென்ற புற்களின்,,
சப்தம் தேவை இன்றி,,
சர்ப்பத்தை நினைவூட்டியது..
பார்த்து பார்த்து ,,
நிசப்தம் கெடாது,,
என் காலடி எடுத்து வைத்தேன்..
**
மிருகங்களின் வாசனை வேறு,,
ஆங்காங்கே உணர்ந்தேன்..
மெல்ல மெல்ல முன்னேறினேன்...
கலவையான உணர்ச்சிகளோடு,
ஒரு அடர்ந்த பகுதியை ,,
அடைந்தேன்..
**
விலங்குகளுக்கு தெரிந்திருக்கும்,,
யாரோ ஒரு மனிதன் உள்ளே,,
நுழைந்துவிட்டான் என்று..
இருப்பினும் அமைதி காத்தன,,
மனிதன் நிச்சயம் தவறு செய்வான்,,
அப்போது தாக்கி கொள்ளலாம் என்று,,
நினைத்திருக்கும் போல..
**
அடர்ந்த புதர் ஓரமாக,,
தெரிந்த சிறு சமவெளி,,
புல்வெளியை நோக்கி,,
மெல்ல முன்னேறி கொண்டு ,,
இருந்தேன்..
**
நேரம் செல்ல செல்ல,,
பின்னிரவின் இருளில்,,
வனத்தினுள்ளே,,
முழுதாக,,
மறைந்தேன்..


No comments:
Post a Comment