என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 4 August 2012

படபடப்பு..பதட்டம்

பதட்டம் அடைகிறது,,

உள்ளம்,.


சிக்கலான நேரங்களில்..


**
பதட்டம் தணிக்க,

பெரு முயற்சி மேற்கொண்டாலும்,


பதட்டம் ஏற்படுவதை,,


தவிர்க்க இயலவில்லை..


**

காரணமற்ற இந்த படபடப்பு,,

இதய துடிப்பை அதிகரித்து,,


தேவை அற்ற மன பயத்தை,,


கிளப்பி விடுகிறது..


**

சில சிக்கலான,,

நிகழ்வுகளில் வரும் படபடப்பு தவிர,,


தனிமைகளில்,,


சில எண்ணங்கள்,, அல்லது சூழல்,,


தரும் படபடப்பு,,


அதிகரித்து கொண்டே இருக்கிறது,,


சமீபமாக..


**

என்றெல்லாம் வீழ்ந்து விடுகிறோமோ,,

அல்லது,,


பொருளாதரத்தில் தாழ்ந்து,,


திக்கற்று செய்வதறியாது,,


நிற்கும் காலங்களில்,,


வரும் படபடப்பும் மிக மோசமான,,


மன பயத்தை தருகின்றன..


**

படபடப்பு...

நிகழ்வுகளை கண்டபோது வருவதை விட,,


தனித்த சூழல்களில்,,


எண்ணங்களின் ஆக்கிரமிப்பால்,,


வரும் படபடப்பு,,


கோர முகம் காட்டி,,


என்னை பயமுறுத்தவே செய்கிறது..


**

உறக்கம் கெட்ட பின்னிரவுகளில்,

என் இதயம் இந்த படபடப்பால்,,


அளவுக்கதிகமாகவே துடிக்கிறது..


**

வேறு வழியின்றி,,

இப்போது தியானத்தில்...

No comments: