என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 10 August 2012

துயரம் சூழ்ந்த பின்

மனம் நிறைய,,

துயரம் சூழ்ந்த பின்,,

வலியுற்று வீழ்ந்த பின்,,

வறுமையோடு இணைந்த பின்,,

சுற்றம் நம்மை விலக்கிய பின்,,

கண்ணீர் கூட இன்றி கண்கள் காய்ந்த பின்,

தத்துவ மேதையும் ,,

அர்த்தமுள்ள கவிஞனும் ,,

ஜீவனுள்ள எழுத்தாளனும்,

சிரிக்க வைக்கும் அற்புத கலைஞனும்,,

பிறப்பெடுக்கிறான்..

No comments: