என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 29 August 2012

கதைகள் பேசியபடி

அந்தி பொழுதில்,,

அவர்கள்,

வெளிநாட்டு குளிர்பானங்கள்,,

வெளிநாட்டு உணவுகளோடு,,

கடற்கரையோர பளபளக்கும்,,

உணவகங்களில்,,

கை நிறைய சம்பளம் பெரும்,,

இளைஞர்களும் ,,

இளைஞிகளும்,,

காதலித்தபடி,,

அல்லது,,

கதைகள் பேசியபடி,

உலகை மறந்து..

மகிழ்வோடு இருக்கிறார்கள்..

வாழ்த்துக்கள்..

****
அங்கே,,

கொட்டடி சாலைகளில்,,

அடைபட்டு,

வீடிழந்து,, எல்லாம் இழந்து,,

சதைகள் பிய்ந்து,

வலிகளோடு,,

கதறல்களோடு,,

போராடும் இளைஞர்கள்,

இளைஞிகள்,,

மற்றும் முதியோர்..

இவர்களுக்கு வாழ்க்கையே போராட்டம்.

கை கொடுப்பார் யாருமில்லை..

**
அவர்களுக்கோ,,

எதை பற்றியும் கவலை இல்லை.

கை நிறைய சம்பளம்,,

தன் வாழ்க்கை,,

காதல் என்ற பெயரில்,,

அழகிய பெண்ணோடு சிநேகிதம்,,

பொழுதுபோக்கு என்றபடி..,

கழிகிறது அவர்கள் பொழுது.

**
இவர்கள் கேள்விக்குறிகளை சுமந்தபடி.

உலகெங்கும் இந்த வேறுபாடுகள்,,

நிறைந்திருக்கின்றன..

**
அப்பட்டமான சுயநல பதவி,, இன வெறி,,

பிடித்தவர்களும்,,

ஊழல் செய்து சொத்து சேர்பவர்களும்,,

அரசியல்வாதிகளாக இருக்கும் வரை,,

தொடர்ந்து இந்த வேறுபாடு இருந்து கொண்டேதான் இருக்கும்..

இந்த வேறுபாடுகள்தான்,,

அரசியல் பிழைப்போரின் பிழைப்பிற்கு வழி..

**
அரசியல்வாதிகள்..

என்றுமே வெறுப்பிற்கு உரியவர்களே,,

இந்நிலை தொடர்ந்தால்..

No comments: