என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 29 August 2012

ஒற்றை மனிதனாய்...

சிறு தூறலில் இருந்து,,

விலகி சென்று விட்டேன்..


நானாகவோ,,


இல்லை எதுவோ,,

என்னை அகற்றி விட்டது,,


அங்கிருந்து..


**

கொடியதொரு, வெற்று ,,

வனாந்திரத்தில்,,


தகிக்கும் சூரிய கதிர்களின்,,


சித்திரவதையை,,


உள்வாங்கி கொண்டே,,


சர்ப்பங்கள் நர்த்தனமாட,,


ஒற்றை மனிதனாய்,,


தூர தெரியும்,,

பசுமை பள்ளத்தாக்கை,,

பார்த்தபடி ,,

நின்றுகொண்டிருக்கிறேன்,,

முன் செல்ல வழியின்றி..

No comments: