என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 10 August 2012

* மறவேன் என்றும் *

என் சின்னஞ்சிறு வயதில்,,

என்னருகே வாழ்ந்த,,

வயதான பெரியவர்கள்,,

மரணித்த நாட்கள்,,

நினைவில் வருகிறது..

கண்கள் கலங்க,,

அருகில் நின்றவர்கள் நினைவிற்கு,,

வருகிறார்கள்..

**
அன்றைய பெரியவர்கள்,,

என் போன்ற குழந்தைகளிடம்,,

பழகிய விதம் நினைவிற்கு,,

வருகிறது..

**
அவர்களுக்கு தெரிந்த அறிவுரை எல்லாம்,

முடிந்த வரை புராணங்களில் இருந்துதான்,,

வரும்..

**
அவர்கள் வாழ்ந்த விதம்,,

அவர்கள் பேசிய விதம்..

அவர்கள் பழகிய விதம்,,

எல்லாமே,

அழியாத என் நினைவு பொக்கிஷங்கள்..

* மறவேன் என்றும் *

No comments: