என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 4 August 2012

சுதந்திர தினம்

பரபரவென்று இயங்கி ,

கொண்டிருக்கிறார்கள் ,,

தொழிலாளர்கள்..

**
சுதந்திர கொடிகளும்,,

பேனர்களும்,,

விதவிதமான வடிவமைப்பில்,,

வேகமாக தயாராகி கொண்டிருக்கின்றன,,.

**
பெரும் ஆர்டர் கிடைத்த திருப்தியில்,,

முதலாளிகள்,,

தொழிலாளர்களை வேலை வாங்கி,

கொண்டிருக்கின்றனர்..

**
இன்னொரு பக்கம்,,

சுதந்திர வரலாற்றை,,

கணக்கெடுத்து,

அறிக்கைகளாக மாற்றும் பணியில்,,

அரசியல்வாதிகளின்,,

உயர்மட்ட குழுக்கள் ,,

இயங்கி கொண்டிருக்கின்றன..

**
இனி சுதந்திர தினம் எங்கும்,

இந்த தேசத்தின் கொடி,,

பட்டொளி வீசி பறக்கும்..

தலைவர்கள் எல்லாம்,,

பரபரப்பாக குண்டு துளைக்காத ,,

காரில் போய் இறங்கி,,

பாகிஸ்தானுக்கும்,

சீனாவிற்கும்,,

தீவிரவாதிகளுக்கும் சவால் விடுவார்கள்..

**
ஆங்காங்கே நாடெங்கும்,,

மற்ற தலைவர்கள்,,

அழகிய கார்களில் பறந்து,,

சென்று சுதந்திரத்தை,,

கொண்டாடுவார்கள்..

**
இங்கே,,

ஒரு கிராமத்தில்,

ஒருவன் இதேல்லாம் வேடிக்கை பார்த்தபடி,,

எப்போதும் போல,

கூலி வேலை செய்து கொண்டு இருப்பான்..

**
இவன்..

ஒருவேளை,,

அன்றைய சுதந்திர போராட்டத்திற்காக,,

கோடிக்கனக்கான சொத்துகளை,,

தானம் செய்த தலைமுறையின்,,

வாரிசாக கூட இருக்கலாம்..

**
ஆக,,

சுதந்திர தினம் கொண்டாட போகிறோம்.

**

No comments: