என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday, 12 August 2012

மரணத்திற்கு பிந்தைய நிலை..

மெல்ல..

நினைவற்றேன் சில வினாடி.


உயிரும்,, மனமும்,,


எங்கோ ஒன்றினையும்,,

புள்ளியில்,,


அமைதி கொண்டேன்..


**

'நான்' இழந்தேன்,,

என் சொல் இழந்தேன்,,


புவி இழந்தேன்,,.


**

எதுவுமற்று,,

மனதும்,, உயிரும் இணைந்த,,


அந்த புள்ளி பிரதேசத்தை,


வெறுமையாய்,,


சலனமற்று,,


வெற்றிடமாக மாற்றி கொண்டேன்..


**

சில வினாடிகள்,,

சில நிமிடங்களாக மாறி,,


சில நிமிடங்கள்,,


சில மணி நேரமாக கழிந்த பின்,,


மெல்ல,,


புவிக்குள் இறங்கினேன்..


**

நினைவில் 'நான்' அமர்ந்தேன்..

கண்களை அகல திறந்தேன்,,


புத்துணர்வில் நனைந்தேன்..


அந்த சில மணி நேரத்தை ,


நினைத்தேன்,,


**

நான் எதுவுமற்று இருந்த,,

நிகழ்வு புரிபடவில்லை..


ஏதும் இல்லை அப்போது..


**

சற்றே நிதானித்த பின்,

மெல்ல புரிந்தது போல இருந்தது,


இப்போது,, ,,


மரணத்திற்கு பிந்தைய நிலை.
. ,

No comments: