என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 25 July 2012

விடைபெறும் தருணம்

கோபத்தோடு மௌனித்தேன் சில நேரம்,,

என் தந்தை என்னை அடித்த போது..

**
சற்றே எதிர்த்து பேசினேன்,,

என் தாய் என்னை கண்டித்தபோது..

**
கோபத்தோடு கடிந்தேன்,,

என் தங்கை என்னை திட்டியபோது,

**
இப்போது,,

மௌனம் மட்டுமே,,

என் துணை..

**
என்னை திட்ட கூட,,

கண்டிக்க கூட ,,

ஆளில்லாத தனிமையில்,,

அந்திம காலத்தில்..

முதியோர் இல்லத்தில்,,

தன்னந்தனியே,,

உறவுகள் இருந்த பொழுதும்,,

அனாதையாக...

**
வாழ்வியல்..

விடைபெறும் தருணம் ...

பிறந்தபோது வந்தது போல் ,, தனியாக,,

***

No comments: