கோபத்தோடு மௌனித்தேன் சில நேரம்,,
என் தந்தை என்னை அடித்த போது..
**
சற்றே எதிர்த்து பேசினேன்,,
என் தாய் என்னை கண்டித்தபோது..
**
கோபத்தோடு கடிந்தேன்,,
என் தங்கை என்னை திட்டியபோது,
**
இப்போது,,
மௌனம் மட்டுமே,,
என் துணை..
**
என்னை திட்ட கூட,,
கண்டிக்க கூட ,,
ஆளில்லாத தனிமையில்,,
அந்திம காலத்தில்..
முதியோர் இல்லத்தில்,,
தன்னந்தனியே,,
உறவுகள் இருந்த பொழுதும்,,
அனாதையாக...
**
வாழ்வியல்..
விடைபெறும் தருணம் ...
பிறந்தபோது வந்தது போல் ,, தனியாக,,
***
No comments:
Post a Comment