என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday 22 July 2012

பயங்கரம்..

அந்தி நேரம் நெருங்க,

சற்று விரைவாக ,,

வாகனம் செலுத்தி கொண்டு இருந்தேன்..

**
முன்னிரவும் வந்துவிட்டது,,

இன்னும் சில மணி நேர ,,

பயணத்தில்,,

வீடு சென்று விடலாம்..

**
இப்போது,,

சற்றே வாகனங்கள் குறைந்திருந்தது,,

இருளான,,

வனம் சூழ்ந்த,,

சாலையில் நுழைந்த போது,,

முற்றிலும் வாகன போக்குவரத்து,,

குறைந்து,,

என் வாகனம் மட்டுமே விரைந்து,,

கொண்டு இருந்தது...

**
என் தூக்கம் விரட்டியபடி,,

என்னை பின்தொடர்ந்த வினாடியில்,,

பாதையின் நடுவே,,

அழகிய சிறுமி,,

ஒரு ஐந்து வயது இருக்கும்,,

அபாய குரலோடு என் வாகனம் மறித்தாள்..

**
சற்றே யோசனையோடு,,

வாகனம் நிறுத்தி இறங்கியபோது,,

அவள் சற்று புன்னகைத்தபடி,,

என்னை நெருங்கினாள்,,,

வினாடி நேரத்தில்,,

எனக்குள் குழப்பங்கள்,,

கேள்விகளோடு,, அவளை நெருங்கியபோது,,

சட்டென்று அவளை காணவில்லை..

**
திடுக்கிடலோடு,,

பயம் கவ்வி கொள்ள,,

சுற்றும் முற்றும் பார்த்தபடி,,

பதட்டத்தோடு,,

வாகனத்தை நெருங்கி,,

கதவு திறக்க முயன்றபோது,,

திறக்கவில்லை...

ஒரு மரண ஓலம்,,

சற்றே புன்னகையோடு ,,

வித்தியாசமாக கேட்டது..

**
நடுங்கியபடி,,

சற்றே அருகில் ,,

சாலையை விட்டு இறங்கி,,

மரத்தின் பின்னால் பதுங்கியபோது,,

ஸ்ஸ்ஸ் என்ற சீறலோடு,,

சர்ப்பம் ஒன்று என்னை வரவேற்றது,,

**
உயிர் பயம்,,

மூச்சையடைக்க ,,

விலகி ஓட எத்தனித்தபோது,,

எண்ணற்ற சர்ப்பங்கள்,,

என்னை நோக்கி சீறியபடி ,,

விரைந்தன,..

**
பயத்தின் உச்சியில்,,

என் கதறல் துவங்கியபோது,,

என் உறக்கம் தடைபட்டு,,

விழித்தேன்..


No comments: