என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday 22 July 2012

மறக்கடிக்கப்பட்ட நிகழ்வுகள்

நீண்டதொரு வலி நிரம்பிய,,

தியாகங்கள்,,

நிகழ்வுகள்,,

போராட்டங்கள்,,

இன்னும் எத்தனையோ,,

மறக்கடிக்கபட்டன கால சூழலில்..

**
எல்லா காலங்களிலும்,,

செல்வாக்கு ( நன்றோ அல்லது தீயதோ) ஒன்றே,,

எளியோரின் புகழை மங்க செய்கிறது,,

தற்காலிகமாக..

**
காலம் பல கடந்த பின்,,

மறக்கடிக்கப்பட்டவை,, சில,,

வெளிவருகிறது.

மற்றவை அப்படியே தொடர்கிறது..

**
வரலாறு,,

நிறைய மறக்கடிக்கப்பட்டு,

மிச்சம் மட்டுமே தருகிறது,,

நமக்கு..

**
இருப்பினும்,,

என்னவென்று,,

யாரென்று ,,

தெரியாத போதும்,,

நல்லவைகள்,,

நல்லவர்கள்,,

என்று பொதுவாக நினைத்து,,

மறக்கடிக்கப்பட்ட நல்ல உள்ளங்களுக்கு,,

நிகழ்வுகளுக்கு ,,

ஒட்டு மொத்தமாக,,

நன்றி கூறுவோம்,, தினம்...

**
ஏன் என்றால்,,

மறக்கடிக்கப்பட்ட தியாகங்கள்,,

நிகழ்வுகள் எல்லாமே சேர்ந்ததுதான்,,

இன்றைய நம் வாழ்வியலின்,,

வரலாறு.. ..

No comments: