தீரா நினைவலைகளின்,
ஆக்ரோஷத்தால்,,
உறக்கம் தடை பட்டு,
மெல்ல விழித்தபோது,,
அழகிய ,,
தனிமை போர்த்திய இரவு,,
சற்றே அமைதியை கொடுத்தது..
**
மெல்ல எழுந்து,,
தனிமை இரவில்,,
நிசப்தம் துணையில்,,
மெல்ல,,
தொலைவில் இருந்த ,,
வனம் நோக்கி ,,
நடந்தேன்..
**
வனத்தின் முன்னே,,
இருந்த,,
அழகிய மலர்சோலையில்,,
நுழைந்தேன்,,
அந்த மலர்களின் நறுமணம்,,
மனதை அள்ளியது..
**
நிலவு வெளிச்சத்தில்,,
அழகிய மலர்கள்,,
மெல்லிய தென்றலுக்கு,,
நடனமாடி கொண்டு இருந்தன..
**
நிசப்தமும்,,
தனிமையும்,,
மெல்லிய குளிரும்,,
இயற்க்கை வனப்பும்,,
மனதை அமைதி படுத்தி,,
சாந்த படுத்தியதில்..
மெல்ல உற்சாகம் கொண்டேன்..
**
மெல்லிய உற்சாகம்,,
அழகிய உற்சாகமாக மாறி,,
வேகம் பெற்றபோது,,
தன்னிலை மறந்தேன்,,
எத்தனை நேரம்,,
தெரியவில்லை..
**
என் உடல் புவியில்,,
மனம் வானில் பறந்த,,
அற்புத இரவில் ,,
வெகு நேரம் உற்சாகம் கொண்டபோது,,
சட்டென்று ஒரு சீறல் சப்தம்,
கேட்டு,, திடுக்கிட்டு,,
மனமும் ,, உடலும்,,
ஒன்றிணைந்த வினாடியில்,,
என் முன்னே ,,
மிக அருகாமையில் தெரிந்த,,
கரு நிற சர்ப்பம் கண்டு,,
உறைந்தேன்..
**
இயற்கைக்கு வலிக்காமல்,,
மெல்ல,,
அங்கிருந்து அகன்றேன்,,
சற்றே படபடப்புடன்..
**
சூழல்.. அதீத உற்சாகம்,,, பேராபத்து..
**
No comments:
Post a Comment