அதிகாலை நகரம்..
இருள் பிரியா,,
அதிகாலை,,
வழக்கத்தை விட,,
குளிர்ந்திருந்தது..
**
மெல்லிய பனி ,,
போர்த்தி இருந்த,,
நகரம்,,
வெகு நாட்களுக்கு பின்,,
நரகம் என்ற சாபத்தில்,,
இருந்து விடுபட்டது..
**
நேற்றைய மழையின்,,
மிச்சம்.,
நகரை மினுமினுப்பாக ,,
மாற்றி இருந்தது..
மகிழ்ந்தேன்..
**
காலை பத்திரிக்கை பணியாளர்கள்,,
குளிரிலும்,,
பரபரப்பாக ,,
பத்திரிக்கைகளை,,
சரி பார்த்து கட்டி கொண்டு இருந்தனர்..
**
காலை நேர காய்கறி சந்தை,,
மிகுந்த பரபரப்போடு இருந்தது,.
தினசரி நான் கண்டுகொள்ளாத ,,
இந்த காட்சிகள்,,
இன்று ஏனோ மனதை கவர்ந்தது..
**
நிதானித்து ரசித்து,,
பின்,,
சற்றே நகரை விட்டு,,
ஒதுக்கு புறத்தில் வண்டியை நிறுத்தினேன்..
**
தூர தெரிந்த,,
பச்சை புல்வெளியை ரசித்தபடி,,
பின்னணியில்,,
பனி போர்த்திய,,
அழகிய மலையின் வனப்பை ,
கண்டு உள்ளம் குளிர்ந்தபடி,,
சூடான தேநீர்,,
பருகினேன்..
**
இயற்கை வழக்கம்போல,,
'
என்னை அழைக்க,,
நிதானித்து,,
சற்றே திரும்பி பார்த்தேன்..
**
பனி போர்த்திய ,,
குளிரான நகரம்,
வெகு நாட்களுக்கு பின்,,
என்னை ஈர்க்க,,
இன்று,
இயற்கைக்கு விடுமுறை விட்டு,,
மீண்டும்,,
நகரக்குள் கலந்தேன்,,
அழகிய மனதோடு..
No comments:
Post a Comment