என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 18 July 2012

அதிகாலை நகரம்..

இருள் பிரியா,,

அதிகாலை,,

வழக்கத்தை விட,,

குளிர்ந்திருந்தது..

**
மெல்லிய பனி ,,

போர்த்தி இருந்த,,

நகரம்,,

வெகு நாட்களுக்கு பின்,,

நரகம் என்ற சாபத்தில்,,

இருந்து விடுபட்டது..

**
நேற்றைய மழையின்,,

மிச்சம்.,

நகரை மினுமினுப்பாக ,,

மாற்றி இருந்தது..

மகிழ்ந்தேன்..

**
காலை பத்திரிக்கை பணியாளர்கள்,,

குளிரிலும்,,

பரபரப்பாக ,,

பத்திரிக்கைகளை,,

சரி பார்த்து கட்டி கொண்டு இருந்தனர்..

**
காலை நேர காய்கறி சந்தை,,

மிகுந்த பரபரப்போடு இருந்தது,.

தினசரி நான் கண்டுகொள்ளாத ,,

இந்த காட்சிகள்,,

இன்று ஏனோ மனதை கவர்ந்தது..

**
நிதானித்து ரசித்து,,

பின்,,

சற்றே நகரை விட்டு,,

ஒதுக்கு புறத்தில் வண்டியை நிறுத்தினேன்..

**
தூர தெரிந்த,,

பச்சை புல்வெளியை ரசித்தபடி,,

பின்னணியில்,,

பனி போர்த்திய,,

அழகிய மலையின் வனப்பை ,

கண்டு உள்ளம் குளிர்ந்தபடி,,

சூடான தேநீர்,,

பருகினேன்..

**
இயற்கை வழக்கம்போல,,
'
என்னை அழைக்க,,

நிதானித்து,,

சற்றே திரும்பி பார்த்தேன்..

**
பனி போர்த்திய ,,

குளிரான நகரம்,

வெகு நாட்களுக்கு பின்,,

என்னை ஈர்க்க,,

இன்று,

இயற்கைக்கு விடுமுறை விட்டு,,

மீண்டும்,,

நகரக்குள் கலந்தேன்,,

அழகிய மனதோடு..

No comments: