**** தீரா நினைவலைகள்****
மழை விட்ட,,
ஒரு மதிய நேரத்தில்,,
புத்தகம் சுமந்தபடி,,
வீட்டிற்கு திரும்ப,,
பேருந்து நிலையம் நோக்கி,,
மெல்லிய மிச்சம் இருந்த,,
மழை துளிகளால்,,
நண்பர்களோடு,,
அழகாக நனைந்து நடந்த படி,,
பேருந்து நிறுத்தம் வந்தோம்..
**
அன்று ஏனோ,,
பேருந்து வெகு நேரம்,,
வர வில்லை..
அன்று வார இறுதி நாள் ..
**
முடிவெடுத்தோம்,..
ஒரு மணி நேர ,,
பேருந்து பயணத்தை,,
புறக்கணித்து,,
நடப்பதென்று..
அது சமவெளி பகுதி அல்ல,,
மலைவாசஸ்தலங்களில் ஒன்று..
**
அது எங்களுக்கு,,
பள்ளி இறுதி பருவத்தை ,
எட்டி இருந்த காலம்,..
மெலிதாக முளைத்த மீசையை,,
பெருமையாக நினைத்தபடி,,
பெரிய மனிதர்கள் என்ற,,
கர்வத்தோடு,
குழந்தை பருவம் எங்களை விட்டு ,,
விலகி சென்று கொண்டிருந்த காலம்.
**
நடக்க ஆரம்பித்தோம்..
அழகிய நட்பில்,
நான்கைந்து பேர்..
**
வழியெங்கும்,,
அழகிய மலைகளும்,
ஈரம் நிரம்பிய,,
தார்சாலைகளும்,
ஓங்கி உயர்ந்த ,,
யுகலிப்டஸ் மரங்களும்,
பச்சை போர்த்திய தேயிலை தோட்டங்களும் ..
எங்களை உவகை கொள்ள செய்து,
எங்களுக்குள் களைப்பு தெரியாது,,
பார்த்து கொண்டன..
(அன்றைய இயற்கைக்கு இப்போது நன்றி கூறுகிறேன்.)
**
மூன்று அல்லது நான்கு மணி நேர பயணத்தில்,,
எங்கள் வீடு இருந்த நகருக்கு
ஆனந்தம் பெருக,,
வந்து சேர்ந்தோம்..
**
வீடு வரும் வரையில்,,
ஆட்டம் ,,
அரட்டை,,
வெள்ளந்தி பேச்சு,,
சிதறல் மழை துளிகள்,,
என இயற்கையின் அரவணைப்பில்,
கொண்டாட்டமாக இருந்தது..
**
இன்று அந்த நினைவலைகள்,,
மீண்டும் சிதறல் துளிகளாக,,
விழியோரம் கசிகிறது..
**
அந்த அழகிய நண்பர்களில் சிலரோடு,
அலைபேசி தொடர்பு மட்டுமே,,
இப்பொழுது,,
இளமை விடை பெரும் சமயத்தில்.. ,
****
((என் பள்ளி இறுதி பருவத்து நினைவலைகள்..))
No comments:
Post a Comment