என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 12 July 2012

ஜீவனோடு கலந்து....காதல்.

மெல்லிய இலையை,,

பன்னீர் கொண்டு,,


நனைத்து,


அழகிய வண்ண மலர்கள் சூழ,

தெளிந்த சிற்றோடையில்,,

அழகிய தீபம் ஒன்றை ,,

பன்னீர் நனைத்த இலையில் ,,

ஏற்றி,,

தூது விடுகிறேன்,,,

**
மறு கரையில்,,

காத்திருப்பாள் உடலற்று,,

உள்ளத்தோடு,,

உயிர்ப்போடு,,

உணர்வோடு...

**
இந்த காதல் தூது,,

புதிதாக விண்ணுலகில் உயிர்த்து கொண்டு,,

இருக்கும் என்னவளுக்காக,, மீண்டும்..

**
இப்புவியில் உடலோடு ,,

உணர்வோடு இருந்தபொழுது,,

முதல் தூது விட்டேன்,,

சம்மதம் கூறி,,

என் கரம் பற்றி,,

என் அந்திம காலம் வரை,,

அழகாக வந்தாள்.

**
இப்போது உடலை மட்டும்,,

இப்புவிக்கு சாம்பலாக கொடுத்துவிட்டு,,

விண்ணுலகம் சென்று விட்டாள்.

**
நானும் விரைவில் வந்துவிடுவேன் அங்கு,,

அப்போதும் அவள் துணை வேண்டும்,,

அதற்கான மறு தூது இது..

**
காதல்.. அழகிய காதல்.. ஜீவனோடு கலந்து
**

No comments: