என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 18 July 2012

கடும் பாசி போல...

படர்ந்திருந்த ,,

மெல்லிய பனியை,


விலக்கி,


அழகிய பச்சை புல்வெளி மீது,,

வெற்றுடலோடு,,


அதிகாலை குளிரில்,,


படுத்து கிடந்தேன்,..


**

சில்லிட்ட உடலோடு,

ஒரு வாக்குவாதம்,,


இறைவனிடம்..


**

ஏனோ,,

நான் கூறியது,,


அவருக்கு,,


புரிபடவில்லை..


அவர் உரைத்ததும்,,


எனக்கு புரிபடவில்லை..


**

இறுதியாக ,,

இறைவன் கூறினார்,,


'கடும் பாசி போல,,


சிலந்தி வலை போல,,


உன் மனமெங்கும்,,


ஏதோ படர்ந்திருக்கிறது,,


விலக்கி விட்டு வந்து,,


வாதம் புரி ..


ஆனால்,


ஒரே நாளில்,,


விலக்க இயலாது,,


அத்தனை சூழல்கள்,,


மனதுக்குள்,,


பாசியாய் படர்ந்திருக்கின்றன'..


என்றார்..


**

சுத்தம் செய்ய,,

புறப்பட்டேன்..


தீர்மானமின்றி.

No comments: