என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 7 July 2012

தந்தை..

தாயை பாராட்டும் எல்லாரும்,

ஏனோ தந்தையை ,,

பாராட்ட மறந்து விடுகிறார்கள்..

**
தன் உழைப்பை ,,

தன் பிள்ளைகளுக்காக மட்டுமே,,

செலுத்துபவர்..

**
அழகிய எண்ணங்களை..

ரசனைகளை..

நல்வழிகளை..

காட்டும் தந்தையை மறந்து,

தாயை பற்றி மட்டுமே,,

கவிதை எழுதுவது சரியா ?

**
தந்தை..

வாழும் தெய்வம்..

அவருக்கென்று ஒன்றும் இல்லை ஆசைகள்.

பிள்ளைகளை மகிழ்வுற செய்வதே,,

அவரின் பேராசை..

**
தாயை புகழும் அதே நேரம்,,

தந்தையை புகழ்ந்தும்,,

கவிதைகள் படைக்கலாமே.

No comments: