தாயை பாராட்டும் எல்லாரும்,
ஏனோ தந்தையை ,,
பாராட்ட மறந்து விடுகிறார்கள்..
**
தன் உழைப்பை ,,
தன் பிள்ளைகளுக்காக மட்டுமே,,
செலுத்துபவர்..
**
அழகிய எண்ணங்களை..
ரசனைகளை..
நல்வழிகளை..
காட்டும் தந்தையை மறந்து,
தாயை பற்றி மட்டுமே,,
கவிதை எழுதுவது சரியா ?
**
தந்தை..
வாழும் தெய்வம்..
அவருக்கென்று ஒன்றும் இல்லை ஆசைகள்.
பிள்ளைகளை மகிழ்வுற செய்வதே,,
அவரின் பேராசை..
**
தாயை புகழும் அதே நேரம்,,
தந்தையை புகழ்ந்தும்,,
கவிதைகள் படைக்கலாமே.
No comments:
Post a Comment