என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 20 July 2012

.....புதிய பயணம் ........

அழகிய வாழ்க்கையை,,

வாழ்ந்து முடித்த,,

களைப்பு,,

முகத்தில் சுருக்கங்களாய் தெரிய,,

புன்னகைக்கும்  உதடுகளும்,,

பல  நூறு  கதைகள்  சொல்லும்,

அழகிய கண்களும்,,

சொல்லும் சேதி என்னவோ,,

தெரியவில்லை..

**
புவியை விட்டு,,

விடை பெற தயாராக,,

புதிய பயணத்திற்கு,,

மலர்ச்சியோடு ,

குழந்தை  உள்ளத்தோடு  ,,

புறப்பட்டு நிற்பது போன்ற,,

உணர்வு ,,

இந்த அழகிய புகைப்படத்தில்..

**
வாழ்வியல்..

அர்த்தம் பொதிந்தது..

நமக்கு ஏனோ அதன் உள்ளர்த்தம்,,

புரிபடுவதில்லை..

**

No comments: