என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 12 July 2012

விடியலை தேடி

வழக்கம்போல,,

ஆழ்ந்த உறக்கத்தில்,,


பின்னிரவு துவங்கும் நேரம்,,


என் மனது,

தன் வேலையே காண்பிக்க ஆரம்பித்தது..

**
தன் உள்ளிருந்த,

என்ன அலைகளை,,

அந்த கரிய இருளின் ,,

நிசப்தத்தில் வெளியே தள்ளியது..

**
வெளியேறிய எண்ண அலைகள்,

ஆவேசமிட்டு,,

ஓலமிட்டதில்,,

உறக்கம் தடை பட்டது...

விழித்தேன் அந்த நடு ஜாமத்தில்..

வியர்த்தது..

**
அமைதி கொண்டு உறங்கும்போதேல்லாம்,,

உள்ளிருக்கும் வேதனைகளை,,

வெளியே தள்ளுவதே,,

தன் வேலையாக கொண்டிருக்கிறது மனம்,,

**
மெல்ல வெளியேறினேன்..

நடந்தேன்,,

வெகு தூரம்..

தனிமையும்,,

கரிய இருளும் மட்டுமே துணை..

**
வெகு தூரம் நடந்தேன்,,

வேறு வழியின்றி,

உடலின் சோர்விற்கு,,

கட்டுப்பட்ட மனம்,,

மெல்ல என்னை உறக்கத்தில் ஆழ்த்தியது..

அங்கேயே உறங்கினேன்,,,

**
மெல்ல வெப்பம் பரவியபோது,,

உணர்ந்தேன்,, விழித்தேன்,,

அழகிய வண்ணங்களோடு கூடிய,,

இயற்கைக்கு மத்தியில்,,

படுத்து கிடந்தேன்..

**
பரவசம் கொண்டு எழுந்தேன் ,,

இரவின் மனதின் தாக்குதலுக்கு ,,

கடவுள் அளித்த,,

காலை பரிசு,,

இந்த அழகிய இயற்கை,

என்று எண்ண தோன்றியது..

**
அமைதி கொண்டு,,

விடியலை தேடி பயணம் தொடர்ந்தேன் மீண்டும்..

No comments: