தனித்திருப்பது..
தனித்திருப்பது..
எனக்கு பிடிக்கும்..
**
நிசப்தமான பின்னிரவுகளில்,,
விஸ்தாரமான,,
பச்சை புல்வெளிகளில்..
முழு நிலவின் வெளிச்சத்தில்,,
மிளிரும் ,,
அழகிய வனம் சூழ்ந்த,,
அந்த பள்ளத்தாக்கில்,,
இறைவனை,
தரிசிக்க அல்லது,,
இறைவனுடன் பேச,,
ஆசை எனக்கு..
**
அந்த,, அழகிய,,
வனம் சூழ்ந்த,,
பள்ளத்தாக்கை தேடுகிறேன்.. தினம் ..
No comments:
Post a Comment