என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Monday 23 July 2012

பொக்கிஷங்கள்

அன்று ஒரு அந்தி நேரம்,,

மாடியில் உள்ள,,


அறையில்,,


நீண்ட நாட்களாய் திறக்க படாமல் இருந்த,,

மரப்பெட்டியை திறந்த போது,


வைரங்களும் வைடூரியங்களும் ,,


கிடைக்கவில்லை..


**

மாறாக,,

அதை விட,,


அறிய பொக்கிஷங்கள் கிடைத்தன..


**

என் தந்தை,,

நான் பிறவாத காலத்திற்கு,,


முன்னே வந்த,,


ஆனந்த விகடன்,,


மற்றும் பழைய வார இதழ்களில் இருந்து,,


தொகுக்கப்பட்டு,,


பைண்டிங் செய்த ,,


கதைகளை வைத்திருந்தார்..


**

ஆவலோடு பார்த்தேன்,,

பெரும்பாலும்,


மணியன் அவர்களின்,,


பயண கதைகள்,,


தொகுக்க பட்டு இருந்தன,,


அதில் ரஸ்ய பயண கதை,,


எனக்கு பிடித்திருந்தது..


**

அதுபோக,,

அழகிய வண்ண ஓவியங்கள்,


நிறைந்த,,


கல்கியின் சிவகாமியின் சபதம்,,


தொடரும் தொகுக்கப்பட்டு இருந்தது..


**

அவ்வபோது ,,

அதை எடுத்து படித்து ,,


பத்திரபடுத்தி வைத்து கொள்வேன்..


சிவகாமியின் சபதம்,,


நாவலில் வந்த ,,


சித்திரங்களை வரைந்து பார்ப்பேன்,


பெரும்பாலும்,,


கிறுக்கல்கலாகதான் முடியும்,..


**

அதை விட,,

அந்த தொகுக்கப்பட்ட தொடர்களில்,,


அடுத்த பக்கங்களில்,,


ஆங்காங்கே தென்பட்ட,,


அந்த நாட்களில் வந்த,,


சினிமா விளம்பரங்கள்,,


குறிப்பாக வாணி ராணி,,


வசந்த மாளிகை ,,


போன்ற படங்களின் விளம்பரங்கள்,


விமர்சனங்கள்,,


மற்ற விளம்பரங்கள்,,


என்னை வெகுவாக கவர்ந்தன,.


**

நான் புவியில் இல்லாத பொழுது,,

நடந்த நிகழ்வுகளின்,,


சினிமாக்களின் விளம்பரங்கள்,,


எனக்குள் பரவசத்தை கொடுத்தன..


காலப்போக்கில்,,


இந்த அறிய பொக்கிஷங்களை ,,


தவற விட்டுவிட்டேன்...


**

இந்த அறிய பொக்கிஷங்களை,,

கண்டெடுத்து ,,


நான் ரசித்த அந்த நாட்களில்,,


என் வயது,,


மூன்றாவது,,


அல்லது,


நான்காவது படித்து கொண்டிருந்த,,


வயது..


**

தவற விட்ட பொக்கிஷங்களை,,

திடீர் நினைவில்,,


காலம் பல கடந்து,,


இப்பொழுது தேடுகிறேன்..


**

No comments: