குழப்ப கணிதம்
இனம் புரியா பயம்,,
கலக்கம்,,
மெல்ல,,
மனதில்..
ஏதோ ஒரு புள்ளியை ,,
போல உணர்கிறேன்..
**
இந்த பிரமாண்ட பூமியில்.,
ஏதோ நடக்கிறது,,
அல்லது,,
எதுவோ என்னை ஆட்கொள்கிறது,,
**
அவ்வப்போது,
என் நிலையில் இருந்து,,
சற்று தள்ளி..
ஆழ்மனத்தின் அடி ஆழத்தில் இருந்து,
என்ன ஓட்டங்கள்,,
விஸ்வரூபம் எடுக்கின்றன,.
**
குழப்ப கணிதம் போல,,
நான் யார்,,
அல்லது,,
நாம் யார் என்பது போன்ற,,
சிந்தனைகள், எனக்குள்,
படர்கின்றன.
**
இன்னும் சற்று நேரம் ஆகும்,
இந்த புவியில்,
சாதாரண மனிதனாக இறங்கி வர..
No comments:
Post a Comment