என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 18 July 2012

குழப்ப கணிதம்

இனம் புரியா பயம்,,

கலக்கம்,,

மெல்ல,,

மனதில்..

ஏதோ ஒரு புள்ளியை ,,

போல உணர்கிறேன்..

**
இந்த பிரமாண்ட பூமியில்.,

ஏதோ நடக்கிறது,,

அல்லது,,

எதுவோ என்னை ஆட்கொள்கிறது,,

**
அவ்வப்போது,

என் நிலையில் இருந்து,,

சற்று தள்ளி..

ஆழ்மனத்தின் அடி ஆழத்தில் இருந்து,

என்ன ஓட்டங்கள்,,

விஸ்வரூபம் எடுக்கின்றன,.

**
குழப்ப கணிதம் போல,,

நான் யார்,,

அல்லது,,

நாம் யார் என்பது போன்ற,,

சிந்தனைகள், எனக்குள்,

படர்கின்றன.

**
இன்னும் சற்று நேரம் ஆகும்,

இந்த புவியில்,

சாதாரண மனிதனாக இறங்கி வர..

No comments: